புதன், நவம்பர் 28, 2012

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.

கலப்புத்திருமணங்களும்  பெற்றோர்களின்  பர்தவிப்பும்


      ஜாதிகள்   பார்க்கக்கூடாது ,தாராள மனம் வேண்டும் .

குழந்தைகள்  பெற்றால் வளர்ப்பது பெற்றோர் கடன்.

தங்கள்  தேவைகள்,  ஆசைகள்  அனைத்தையும் விட்டு

வளர்க்கும்  பெற் றோர்களுக்கு ,

இன்றைய  குழந்தைகள்  ஆங்கிலம் படித்தபின்

முதலில் பேசுவது வரைவது எல்லாமே இதயபடம்,  ஒரு அம்பு ,

ஐ லவ் யு   தான்.


கலப்பு   மணத்தை   ஆதரிக்கும் அரசாங்கம்,முற்போக்கு வாதிகள் ,

பகுத்தறிவு வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சு பேசும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான்  உள்ளனர். அனைவரும் ஜாதிவாரி மக்கள் துகைக் கணக்கை  ஆதரிக்கின்றனர்.

 கலப்புத்திருமணம்  செய்த பின்  பிறந்த குழந்தையின் ஜாதி  இப்பொழுது

பெரிய  பிரச்சனை .அதிலும் அம்மா  ஜாதியா,அப்பா ஜாதியா.

காதல் திருமணம்  ஜோடி  பிரிந்தால் அந்தக்குழந்தை அப்பாவின் பாட்டியால்
வளர்ப்பதில்  எவ்வளவு சிக்கல் .

எனக்குத்தெரிந்த ஒரு பெண் காதலனைப் பிரிந்து    அப்பா    வீட்டிற்கு  குழந்தையுடன்  வந்து  பட்ட பாடு தற்கொலையில் முடிந்தது.

இன்று  குழந்தைப் பருவத்தில்    இருந்தே  காதல் என்பதும்,அப்பாவை மதிக்கக் கூடாது  என்பதும்,யாரும் தேவை இல்லை  எப்படியும் பிழைக்கலாம்  ஒரு
தவறான  மனோபாவம் என்ற   தொற்று நோய் வளர்ந்து   பலரை  நிம்மதி இழக்கச்  செய்கிறது.  பலரை கொலை  காரர்களாக்குகிறது. பலர் வாழ  வேண்டிய  வயதில் பரலோகம் அனுப்புகிறது.

இன்று  குட்டி -  சுட்டி விளம்பரம் விளம்பரம்.ஒரு 7-8 வயது  சிறுமியிடம் ஒரு வினா ---காலேஜ்    சென்று  என்ன செய்வாங்க?
 விடை --காதலிப்பார்கள் .
விடை கேட்டு  சிரிப்பு.

 குஷ்பு  பேசியதற்கு  நீதி மன்றம் மன்றம்..போராட்டம் .

  நம் தமிழர் பண்பாடு இப்பொழுது மௌனம்.

பெற்றோர்கள் ஒரு எந்திரம் .குழந்தை  பெற்று வளர்ப்பது.

இந்நிலை   உருவாக்கும்  பெரிய திரை ,சின்னத்திரை  அவர்கள் தனிப்பட்ட

வாழ்க்கை  நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது .

 அவர்களும் நீதிமன்றம் செல்கிறார்கள்.

எதிர்கால இளைஞர்கள், நிம்மதி இன்றி இருக்கும் சமுதாய  சூழல் உருவாகும்.

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.




 

கருத்துகள் இல்லை: