புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள்.பகுதி--4

1956 இல்  அம்மாவிற்கு சிங்கம்புணரி   உயர் நிலைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் பணி  கிடைத்தது.
பின்னர்  கொம்புக்காரநேந்தல் உயர்நிலைப்பள்ளியில் .அதெல்லாம் மிகவும் கஷ்டமான சூழல்.  இதற்கிடையில் கர்ப்பம் வேறு.இன்றைய காலம் போல் வசதியில்லை.ஆண்டுக்கு ஒரு குழந்தை.அதை சரிவர கவனிக்க முடியாத சூழல். இரக்கமற்ற உதவாத உறவினர்கள்.ஓராண்டு ஆசிரியர் பயிற்சி அனுப்பக் கூட விரும்பாத தெரியாதவர்கள்.பின்னர் பழனிக்கே திரும்பி வந்து அருகில் உள்ள நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி,கோரிக்கடவு  பள்ளிகளில் பணியாற்றினார்.எனக்குப்பின் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் அகாலமரணம்.மனவேதனை,புகுந்த வீட்டுக்கொடுமை.அம்மாவிற்கு ஆதரவு என் மாமா நாகராஜன்,பாட்டி,தாத்தா,மற்றொரு மாமா சுப்பிரமணியன்,அப்பா. ஆனால் அம்மா படுத்த படுக்கையாக நோயிருக்கும்போது அப்பா  தான் முழு கவனிப்பு. என் மாமா,பாட்டி அடிக்கடிவந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

ஆஹா!  என் அப்பாவின் அப்பா தாத்தா பற்றி கூற மறந்துவிட்டேனே! அவர் ஒரு தெய்வீக மனிதர். அவர்  எனக்குத்  தெரிந்து தனியாகவே வீட்டின் ஒரு ஓரத்தில் சமைத்து சாப்பிடுவார்.அந்த பெரிய வீட்டில் மூன்று தனிக்குடித்தனங்கள் .பெரியப்பா,சின்ன பெரியப்பா,என் அப்பா. ஆனால்,எங்கள் தாத்தா பார் வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது.அவரிடம் தான் நான்,பெரியப்பா குழந்தைகள் வாங்கி சாப்பிடுவார். எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து தாரளமாக  பலசரக்கு சாமான்கள் திருடுபோகும்.அம்மா பணி முடிந்து திரும்பியதும் வீடு போர்க்களமாகி விடும்.ஆனால் தனியாக வேறு வீட்டிற்குப் போக விடமாட்டார்.ஒரு முறை  வீட்டை காலி செய்யும் பொழுது போககக்கூடாது என்று
வண்டி சக்கரத்தில் படுத்துக் கொண்டார்.

தொடரும்.

கருத்துகள் இல்லை: