புதன், நவம்பர் 28, 2012

பணம் குணத்தைக் கெடுக்கும்

அவசியமானவைகளும்  வணிக  நோக்கமும் 


       மனிதர்   நிம்மதியாக வாழ  நல்லொழுக்கம் அவசியம்.
மனிதர்கள் ஆத்ம  திருப்தியுடன் வாழ ஆன்மிகம் அவசியம்.

மனிதர்கள் நிமிர்ந்து வாழ கல்வி அவசியம்.

மனிதர்கள் ஆரோக்யமாக வாழ மருத்துவம் அவசியம்.

மனிதர்கள் பயமின்றிவாழ காவல் துறை அவசியம்.

குடும்பங்கள் குதுகூலமாக வாழ குடும்ப அமைதி அவசியம்.

இன்றைய  சூழலில்  மேற்கண்ட நான்குமே வணிக நோக்கமாக மாறிவிட்டன.

நல்லொழுக்கங்களை எதிர்கால சந்ததிகள்,
கல்விநிலையங்கள்,சமுதாயம்,பொழுதுபோக்கும் நாடகம்,திரைப்படம் ,
தொலைக்காட்சிகள் மூலம் பெறுகிறான்,

இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாகவும் ,ஏற்றதாழ்வுகள் போக்குவதாகவும் சமத்துவம் ,சகோதரத்துவம் உண்டாக்குவதாகவும்  அமையவேண்டும் .
அமைதிக்காக  திரைப்படங்கள் சென்றால்,முதல் காட்சியே கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,கள்ளக்கடத்தல், காவல்துறை அனைத்துமே

நேர்மையைவிட  பணமே பிரதானம்  என்ற போக்கு.

ஆலயங்கள் செல்ல முடியாமல் சிறு நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு

உள்ளே சென்றால் உள்ளம் அமைதி அடைவதற்குப் பதிலாக எத்தனை எத்தனை ஏற்ற தாழ்வுகள்.ஜாதிய,பொருளாதாரம்,வடமொழி ,தமிழ் மொழி வழிபாடு .திருநீறு வழங்குவதில் காட்டும் பாகுபாடு


கல்வி  வாணிகம் படு ஜோர்.அரசாங்கம் தன்  பள்ளிகளை வளர்க்கிறேன் என்று சொல்கிறது .ஆனால் மூடப்பட்ட  பள்ளிகள் அதிகம்.  அதற்கான காரணங்கள் மன சாட்சியுடன் வெளியே சொல்லமுடியாது.பள்ளி நேரங்களில்
பள்ளி வகுப்பறைகளில்   மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் ஆசிர்யர்களும் சேர்ந்து இருப்பார்கள்.

மருத்துவம் அனைவரும் அறிந்ததே

தியாகம்,சேவை மனப்பான்மை  எங்கும் இல்லை .நாடு என்னவாகும்

  இளம்பிஞ்சுகள்  காதலைப்பற்றி பேசுகின்றன.கல்லூரி எதற்கு?எட்டுவயது

சிறுமியின் பதில் காதலிக்க.

பணம்  குணத்தைக் கெடுக்கும்


கருத்துகள் இல்லை: