வெள்ளி, நவம்பர் 16, 2012

இளைஞர்கள் வலைத்தளம், இந்தியாவின் எதிர்காலம்


 





தர்மத்தால் செல்வம் குறையாது
?????????? 26,2012,
09:09  IST
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். 
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். 
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். 
* தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.
* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.
- நபிகள் நாயகம்


 இடுகைகள்  பல ,
கணினி  பிறப்பிக்கிறது
வலைத்தளங்கள் மூலமாக.
இளைஞர்கள்  வலைத்தளம்,
இந்தியாவின்  எதிர்காலம் 
ஒளிமயமானது  என்பதற்கே 
ஒரு ஒளிச்சுடராக விளங்குகிறது.
அதில் வெளிநாட்டு வேதனைகள் ,
சஹிக்கும்  நாங்கள்,
மத வேற்றுமை மறக்கிறோம்.
மொழி வேற்றுமை  மறக்கிறோம்.
அழகுதேவதைகள் கண் முன் தோன்றினாலும்.
எண்களின் பார்வை,அவர்களின் மேல் 
படுவதில்லை. புலன் அடக்கம் கற்றுக்கொள்கிறோம் .
புலால் உண்பதில் சில சமயம் ஜாதி வேறுபாடு மறக்கிறோம்.
தம்பி,தங்கைகளுக்காக,அம்மாவிற்காக ,உற்றார் உறவினர்களுக்காக,
சிக்கனைத்தை  கடைபிடிக்கிறோம்.
தாய்நாட்டில்  இல்லா வேதனை இருந்தாலும் 
நாங்கள் இருக்குமிடத்தில்,
வையகம் வாழ்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இல்லை.
மொழி வேற்றுமைகள் இல்லை.
மத வேற்றுமைகள் இல்லை.
வசுதைவ குடும்பகம் என்ற நம் ஆன்றோர் 
கூற்று இங்கு மெய்யாகிறது,
இது ஒரு வெளிநாட்டு இளைஞரின் கவிதை.(surukkam)
வெளிநாட்டுப்பிரிவில் அவர் காணும் சுகம்.
பாரதநாடு பலம் பெரும் நாடாக  
இளையர்கள் கனவில் ஏற்படும் தடைகள் 
மத-இன-ஜாதிக் கலவரங்கள்.
மீண்டும் மீண்டும் ஒளிக்க  வேண்டிய 
அவ்வையின் பாடல்:
இட்டார் பெரியார் ;இடாதார் இழி குலத்தோர்.
பாரதியின் பாடல் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா.
ஆனால் இன்று ஜாதி என்ற பெயரில்.
3% விகித முள்ள ஜாதியைமட்டும் 
மிகக் கீழ்த்தரமாக தாக்கும் கூட்டம்.
இது பொறாமையா?இயலாமையா?
அந்தப்  பிரிவு இல்லை என்றால் 
சுபகாரியங்கள் யாரும் நடத்த 
ஒரு அச்சம்.
திதி கொடுக்க அந்த இனம் வேண்டும்.
புதிய தொழில் துவங்க 
கணபதி ஹோமம் வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற யாகங்கள் வேண்டும்.
ஹோமங்கள் வேண்டும்.
உண்மைகளை உதைக்க உதைக்க ,
ஆலயங்களில் கூட்டம் .
முன்னேற்றச் சிந்தனைகள் 
முன்னேறச் செய்யும்.
பாரதம் பார் புகழ  
இன வேற்றுமை ஒழிய வேண்டும்.
ஆனால்,
அரசியல்வாதிகள் 
தங்கள் சுய நலத்திற்கே 
ஜாதி வெறி, சமயவெறி தூண்டும் போக்கு.
இதே சத்திய வாக்கு.

கருத்துகள் இல்லை: