சனி, டிசம்பர் 15, 2012

வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.

மனிதமனம்

மனிதன்  தன்  கடந்த  காலங்களை  மறந்து

உறவை விரும்பினாலும் சில உறவினர்களின்

பேச்சுக்கள் உறவை துண்டிப்பதாகவே அமையும்.

மலரும் நினைவுகளும்  சுகமளித்தாலும்.

கசப்பான அனுபவங்கள்

ஆழ்மனதில் இருந்து நீங்கி சாதரணமான  நிலைக்கும்

சஹஜ நிலைக்கும் வருவது

கடினம்.
இந்நிலையில் தான்  பட்டினத்தார்
அனைத்தையும் வெறுத்து
ஒட்டைஅப்பம்  வீட்டை சுடும் என்றார்.

இந்த விரக்தியில் தான் சித்தர்கள் நிலை.

சித்தர்த்தருக்கு  சமுதாயத்துன்பங்கள் துறவு நிலைக்குத் தள்ளியது.

மன்னர் பர்த்துஹரிக்கு ராஜசுகம் கசந்தது.

அருணகிரிக்கு நாரிசுகம் ரோகத்தை அளித்து  பக்தனாக மாற்றியது.

சிலர் பிறவியிலேயே தெய்வாம்சம் அடைகின்றனர்.

அசோகர் கொடுங்கோலனாக இருந்து

புத்தமதத்தைத் தழுவிய பின்

மக்கள் போற்றும்  பேரரசர்.

பலர் திருந்துகின்றனர். சிலர் இறுதிவரை அவப்பெயர் .

அவன் ஹரிச்சந்திரன்.அவன் விபீஷணன்.

இவன் கர்ணன். அவன் மைதாஸ் டச்.
பேராசை. இவன் இராவணன்.

இவன் ப்ருடஸ் .(துரோஹி)

எட்டப்பன் பரம்பரை.
செயல் எப்படி மனிதனை உயர்த்திதாழ்த்துகிறது .

காந்தியைத் தாத்தா என்கிறோம்.
நேருவை மாமா என்கிறோம்.
ஹிந்தியில் "சாச்சா "என்கின்றனர்.
காமராஜரை கர்மவீரர் என்கிறோம்.
படேல் இரும்புமனிதர்.
வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.












--
Regards,
Anandakr

கருத்துகள் இல்லை: