சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.




கருத்துகள் இல்லை: