வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




கருத்துகள் இல்லை: