ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;



Tuesday, January 8, 2013


ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

 அன்பும்,பண்பும் ,உயரிய நோக்கம்

கொண்ட  புதுமை இளம் பெண்களே!!!

செய்தித்தாள்களில் வரும் செய்திகள்,

கற்பழிப்புக்கு பெண்களின் ஆடைகள்,அவர்களின் சம்மதமே காரணம்

என்று    சாமியார் ஆசாராம் பாபு கூறியுள்ளார்.

நடுராத்திரியில் பெண்கள் நடமாட்டம் கூடாது
 என்று ஜனாதிபதி மகன்  கூறி உள்ளார்.

திரௌபதி துகில் உரிய  திரௌபதியே  காரணம்.

அவள் சிரித்து துரியோதனின்  கோபத்தைத்  தூண்டியவர்.

அதனால் பெண்களின் அவமானம்  பெண்களால் ஏற்படுவதே.

ஆசாரம் இப்படி கூறியதற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் அனைவரும் நாய்கள்.

ஆஷ்ரமங்கள் வளர்வதே அமைதி தேடிச்செல்லும் பெண்களால்.

அதனால் அவர்கள் பெண்கள் சில சுலோகத்திற்கும்,ஆஷிர்வாதத்திற்கும்
மயங்குபவர்கள் என்ற எண்ணம்.

அதனால் தான் பெண்கள் தெய்வங்களாக,காளி ,மூளி ,மாரி ,
என்று பயங்கர ஆயுதங்களுடன் ,வெட்டுண்ட தலை கையில் ஏந்தி
முண்டத்தில் மீது நின்று அதி பயங்கரமாக காட்சி அளிக்கின்றனர்.

இன்று பெரும் நகரங்களில் இளம் பெண்கள் பணிபுரிந்து  வீடு திரும்பும் நேரம்  உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் காளி ,மூலி ,நீலி  யாக மாறி தற்காத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்குமா?சீரழிந்த பின் சட்டநடவடிக்கை.

அரசியல் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம்

செய்தால் நீதிமன்றம் தண்டனை வழங்க வாய்ப்பில்லை.அவர்கள் பதவி நீக்கம் செய்ய முடியாது.

   இராமாயண மகாபாரத காலத்தில் இருந்தே இதே நிலை.

  இப்பொழுது ஒரு புதிய கூட்டம்;உயர் சாதிப்பெண்களை  விரட்டி விரட்டி
காதலித்து களங்கப்படுத்தி சீரழிப்பது என பா.மு.க. தலைவர் கூறி உள்ளார்.

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

கருத்துகள் இல்லை: