புதன், ஜனவரி 23, 2013

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=

   உபவாசம் என்பதும் தக்கவர்களின் வழிகாட்டுதலால் இருக்கவேண்டும்.

உபவாசம் இருக்கும் நாளில் குடல் ஒய்வு பெறுகிறது.
  1. வாரம் ஒருமுறை உபவாசம் இருப்பவர் தன்னையும் அறியாமல் ஒரு தெய்வீக சக்தி பெற்று முகத்தில் ஒரு ஒளி தேஜஸ் பெறுகிறார்.
  2. அவர் மனதில் தெய்வீகப் பற்று ஏற்படுகிறது.
  3. உபவாச காலத்தில் ஆண்டவனைப்பற்றிய சிந்தனை அதிகமாகிறது.
  4. இறைவனை சரணாகதி அடையும் நிலையில் லௌகீக கவலைகள் பறந்துவிடுகின்றன.
  5. வயிறுநிறைய  சாப்பிடுபவனுக்கு ஒரு தனிமயக்கம்தான் ஏற்படும்.அவன் ஆசைகளில் தவறான வழிகளைப் பிபற்றுகிறான்.வாழ்க்கையில் ஒரு அரக்க குணம் ஏற்படுகிறது.
  6. உபவாசம் தெய்வீக இன்பத்தையும் பிரம்மானந்தத்தையும் தருகிறது.
  7. அலௌகீக  ஆனந்தம் அநுபூதி உபவாசம் இருப்பதை அதிகரிக்கிறது.
  8. அந்த மெய்யுணர்வு வர்ணிக்க இயலாது.
  9. உபவாசகருக்குத் தெரியாமலேயே வரும் இறைவனின் மேல் ஏற்படும் பக்தி ,தெய்வீக சக்தி,உபவாசம் இருப்பவரை இந்த அழியும் உலகில்  இறைவனின் பேரரசை ஆளும் தன்மை பெறுகிறான்.
  10. அவர் உள்ளத்தில் தோன்றி வெளிப்படும் கருத்துக்கள் புற இருளைப்போக்கி   ஒரு ஆன்மீக ஒளி வீசச் செய்யும்.

கருத்துகள் இல்லை: