செவ்வாய், ஜனவரி 22, 2013

விரதம் உபவாசம் மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில்

நம் முன்னோர்கள்  அடிக்கடி விரதம் இருப்பார்கள்.அன்று எதையும் சாப்பிடமாட்டார்கள்.சிலர் பழரசம் அருந்துவார்கள்.
அவ்வாறு செய்வது ஒரு சிகிச்சை என்பதை அவர்களோ,அவர்களுக்கு முன்னோரோ கூறவில்லை. அவர்கள் ஒவ்வொரு அறிவியலையும் ஆன்மீகத்துடன் இணைத்து தெய்வீக பக்தி என்றே கூறிவந்துள்ளனர்.
  நகத்தைக்கடிப்பது ஆசாரம்,மடி என்றதால் ஏளனம் செய்தோம்.

இன்று அறிவியல் ஆராய்ச்சிப்படி  உபவாசம் என்பதும்  ஒருசிகிச்சை என்று கூறப்படுகிறது.
நீராகாரத்திற்கு  மகத்துவம் அளிக்கப்படுகிறது.
ஜீரண  உறுப்பிற்கு ஓய்வு அளிக்க உண்ணாவிரதம் .
அன்று சாப்பிடும் எண்ணம் தோன்றாது இருக்க .
சாப்பிடும் ஆசை வராதிருக்க இறை பக்தி ஆன்மிகம்  உறுதி அளித்தது.

நமது நாட்டின் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் ஆன்மிகம் என்ற பயத்துடன் உடல் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளித்துவந்துள்ளது .அதில் ஏகாதசி,கார்த்திகை விரதம் உபவாசம்  மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில் விளக்கப்பட்டுள்ளது.
உபவாசத்தின் முக்கியத்துவத்தை அடுத்த பதிவில் காணலாம்.




கருத்துகள் இல்லை: