செவ்வாய், ஜனவரி 22, 2013

உபவாசம் தொடரும் .-பகுதி -2

 ஸ்ரீ சுவாமி  சிவானந்த எழுதிய "practice of nature cure"  நூலில் உபவாச சிகிச்சை என்பது 14வது அத்தியாயம்.


உபவாசம் நமது உடலில் உள்ள கழிவுகளை  வெளி ஏற்றுகிறது .உபவாசத்தால் சக்தி  அதிகமாகிறது.

உபவாசம் செய்து பிரார்த்தனை செய்தால் நோய்கள் இல்லா வலிமை மிக்க உடல்  ,ஆரோக்யமான உடல்,இறை சக்தி கூடுகிறது.

உபவாசம் இருந்து தியானம் செய்யுங்கள் --உணவில் சுயக்கட்டுப்பாடு அவசியம். அதற்கு இறைவனின் அச்சத்தால் ஏற்படும் விரதம் வழிவகுக்கும்.
இக்காலத்தில்  அறிவியலுக்கு முக்கியத்துவம் தருவதால்,ஆன்மீக பயம் நீங்கி

தவறுகள் நிகழ்கின்றன..அறிவியலில் மாற்றம் உண்டு.ஆன்மீக இறைதத்துவங்களில் மாற்றம் இல்லை.

இறைதத்துவங்களில்  இயற்கை நம்மை குணப்படுத்துவதில் நான்கு தத்துவங்கள்  என்று நம் நாட்டு வைத்திய முறைகள் கூறுவதாக சுவாமிஜி எழுதிஉள்ளார்.
அவை--1.சூரிய வெளிச்சம்.2.புதிய காற்று.3.உபவாசம்.4.ஒய்வு.

நோயின் அறிகுறிகள்--1.சளி,2.தலைவலி 3,லேசான காய்ச்சல்,4.சிறிது இருமல் 5.சுமை ஏறிய  வயிறு.

மேற்கூறிய ஆபத்துக்களைத் தடுக்கவே நம் சாஸ்திரங்கள் கூறியவை.
தெய்வீக அருள் பெறும்  உபவாசங்கள்.உண்ணாநோன்பு.

ஏகாதசி,2.பிரதோஷம்,3.பௌர்ணமி,4,அமாவாசை,5.கார்த்திகை,சோமவாரவிரதம் என்று வார விரதங்கள் முதலியவை.

உபவாசம் தொடரும் .-பகுதி -2

கருத்துகள் இல்லை: