ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

வாழ்க ஜனநாயகம்.


மக்கள்   நலம் 

மக்கள் நலம் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள்
  ஒரு புதிய குடி இருப்பு 

உருவாகும் பகுதியில்
  உடனடியாக சாலை வசதிகள்,
குடிநீர் வசதிகள்
 மின் மின் வசதிகள் 
,சுகாதாரம்,கழிவுநீர்  வெளியேறும் வசதிகள் போன்றவற்றை 
செய்ய முழு முயற்சி எடுக்கவேண்டும்.

வரிகள் மட்டும் வாங்கி சிலை வைக்க ஒரு அரசு சிலவு செய்கிறது.
அதற்கு சில லக்ஷங்கள்.
மற்றொரு அரசு சிலை எடுக்க சில லக்ஷங்கள் 
சிலவு செய்கி றது.
ஐந்தாண்டுகளுக்குப்பின் மீண்டும் சிலை வைத்த அரசு 
ஆட்சிக்கு வருகிறது.
மீண்டும் சிலை வைக்க சில லக்ஷங்கள் சிலவு செய்கிறது.
இது எல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சுகாதாரமற்ற 
பகுதிகளில் வாழும் மக்கள் வரிப்பணம்.
சமாதிகள் புதுப்பிக்க லக்ஷக்கணக்கில் பணம்.
குடை வைத்த சிலவு,
குடை அகற்றி சீர் படுத்த சிலவு,
ஆயிரக்கணக்கில் மக் கள்   செல்லும்  சாலைகள் 
மேடு,பள்ளம் ,கழிவு நீர் ஓடும் சாலைகள்,
உண்மையில் ஜனநாயகத் தலைவர்கள் ஆத்மா  ஷாந்தி அடையுமா?
ராம்நகர் வாசிகள்,குபேர் நகரவாசிகள் எவ்வளுவு வேதனை உடன் வாழ்கிறார்கள்.
நாடு வளம் பெற மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்.
ஒருபகுதியில் பூங்காவிற்கும் சாலைக்கும் அழகுபடுத்தி, 
ஒருபகுதி மக்களை குண்டும் குழியும் சாக்கடை நீரும் உள்ள பகுதியாகவைத்து.
ஓட்டுமட்டும் பெரும் அரசுக்கும் 
ஜனநாயகம் என்ற பெயர்.
சட்ட மன்றம் மாற்ற,மீண்டும் மாற்ற, இடிக்க, கட்ட சிலவு.
அடிப்படைவசதியில்லாப் பகுதி அப்படியே .
கழிவுநீர் ஓடும் துர்நாற்றத்துடன்.
வாழ்க ஜனநாயகம்.
மக்கள் ஒருநாள் விழித்தெழ 
பகுத்தறிவு வேண்டும்.
ஆயிரக்கண க்கில் வாழும் குடி இருப்பு 
பகுதி மக்கள்   தங்கள் அடிப்படை வசதிக்குப் 
போராடவேண்டும்.
சுதந்திர நாட்டில் மீண்டும் வரிகொடா இயக்கம் வேண்டும்.

வரி வசூலிக்கும் அரசு தண்ணீர் விநியோகம் செய்யாமலேயே 
தண்ணீர் வரி வசூலிக்கிறது.
மன சாட்சி இல்லா, அரசு,அமைச்சர்கள் .அதிகாரிகள்.
இதைக்கேட்கத் தயங்கும் மக்கள்.
மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் சுகபோக வாழ்க்கை.
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள்.
வாழ்க ஜனநாயகம்.


கருத்துகள் இல்லை: