திங்கள், ஏப்ரல் 15, 2013

விஜய வருடம்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  என்று தொண்டு செய்யவே 
தொல்லுலகில்  தோன்றியோர் பலர்  நம் பாரதத்தில் - 
ஆன்மீகக் கொள்கைக்கும் ,ஆசையில்லா வாழ்க்கைக்கும் 
வழிகாட்டிய  தர்மத் தலைவர்கள் ,கவிஞர்கள் 
வெற்றிநடை   காட்டிய  வழியினில் 
பக்தி  வழியில் பார் புகழும் பாரதத்தில் ,
பாதை தவறி முறை தவறி  பணமே பெரிதென்று 
நீதி தவறி வாழ்வோர் மனம் மாறி நேர்மை வளர 
நேர்வழியில் செல்ல  ஆண்டாள் நாச்சியார் 
ஆள்வோரை சீர் படுத்த இரு கரங்கள் கூப்பி ,வேண்டி 
விஜய  வருடம் அனைவருக்கும்  வெற்றி தர 
வாழ்த்துக்கள்; பிரார்த்தனைகள்.

கருத்துகள் இல்லை: