புதன், ஏப்ரல் 17, 2013

வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.


    ௨௦௧௪   பாராளுமன்ற தேர்தல்.

பார் புகழ்  பாரதம்,
 இன்று  ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம்  என்று

பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப்  பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும்  படி  எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.


குற்றவாளிகள் தண்டிக்கப்  பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்

துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்

ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .

இவைகளைக்  கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
 வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.






கருத்துகள் இல்லை: