திங்கள், ஜனவரி 09, 2012

viruppangal

விருப்பங்கள்.

வினோதங்கள்.

சிலர் தான்

 விரும்புவதை

தான் விரும்புபவர்களுக்காக

விட்டு விடுகின்றனர்.

சிலர் தன் விருப்பங்கள்

நிறைவேற

தன்னை நேசிப்பவர்களை

துறந்து விடுகின்றனர்
.
சிலரின் விருப்பங்கள்

மற்றவர்களின் விருப்பங்களாக

ஆகிவிடுகின்றன,

சிலருக்கு தான் வெறுப்பதை

விரும்பும் சூழல்

இயற்கையாகவே

அமைந்து விடுகிறது.

சிலர் விருப்பங்கள்

நிறை வேறாதென்று

வாழ்க்கை வாழவேண்டுமா?

வாழ்க்கை முடித்துக்கொள்ளலாமா?

என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

விரும்பும் தொழில்,விரும்பும் மனைவி,

விரும்பும் பெற்றோர்கள்,விரும்பும் நண்பர்கள்.

விரும்பும் வசதி- வாய்ப்புகள்,

கிடைக்கப் பெற்றோர் வையகத்தில் இல்லை.

 பிறப்பு-மரணம் இடையில் வாழ்க்கை.

ஒன்று நிச்சயிக்கப்பட்டது.

அது இறுதி.

நடுவில் உள்ள வாழ்க்கை

போராட்டம்

அதனால்

அதை ஒதுக்கி,

அமைதி தேடி கானகம்

சென்றோர் ஆன்மீகவாதிகள்.

உலகம் உய்ய வனம்

 சென்றோர் உத்தமர்கள்.






கருத்துகள் இல்லை: