திங்கள், ஜனவரி 09, 2012

khudhaa =kadavul

குதா=கடவுள்

உருது கவிதை (தமிழாக்கம்)
அக்பர் இலஹாபாதி

இறைவனின் பெயர் ஒளி.
இறைவனின் பெயர் அன்பு.
இறை நாமம் ஜபித்தால்,
மன வலிமை கிட்டும்.
நாக்குக்கு பேசும்
உரிமை(திறன்) கிட்டும்.
இரவும் பகலும்
இறைவனின் ஆணைப்படியே.
விண்ணின் விண்மீன்கள்
ஏற்பாடும் ஆதிக்கமும்
ஆண்டவனின் அதிகாரத்திலே.
பருவ கால மாற்றமும்
பகவானின் கட்டளையே.
அவன் கட்டளையாலேயே
காற்று வீசுகிறது.
அவன் கட்டளையால்
பழங்களும் தானியங்களும்
விளைகின்றன.
அவன் கட்டளையே
மழை பெய்வதும்.
ஆனால் மனிதன்
ஆணவத்தால்
தன்னையே
உயர்ந்தவனாக
கருதுகிறான்,
மற்றவர்களை மதிப்பதில்லை
மரணம்  நெருங்கும்    போது
வேறுவழி இன்றி,
இருப்பான்.
செயல் நன்காக  இருந்தால்
உயர் இடம் கிடைக்கும்,
அழியும் இந்நில உலகில்
மனிதன் சோதனைக்கு
உட்படுத்தப்படுகிறான்.
நமக்கு தர்மங்கள்
நல்வழி காட்டுகின்றன 
பெரியோரை  
மதிக்கவேண்டும்.
இறைவனிடம்
அஞ்சவேண்டும்.
தீய செயல்களில் இருந்து
தப்பிக்க வேண்டும்.
இறை மார்க்கத்தில்,
செல்லவேண்டும்.



,

   




கருத்துகள் இல்லை: