திங்கள், ஜனவரி 09, 2012

manithan

மனிதன்

கவி ----நசீர் அக்பராபாதி
உலகின் பேரரசுனும் மனிதன்.
ஏழையும் பிச்சைக்காரனும் மனிதன்.
இரக்கமற்ற பணம் படைத்தவனும் மனிதன்.
அறுசுவை உண்டி ஆனந்தமாய்
 உண்பவனும் மனிதன்.
பிச்சை எடுத்து சாபிடுபவனும் மனிதன்.
ஐயா!
தொழுகை செய்பவனும் மனிதன்.
தொழுகை செய்விப்பவனும் மனிதன்.
மனிதன் தான் குரானையும் படிக்கிறான்.
மனிதன் தான்  
செருப்பைத்  thirudukiraan ,
திருடுபவனையும் கண்டுபிடிக்கிறான்.
மனிதனுக்காக உயிர் தியாகம்
செய்பவனும் மனிதன் தான்.
மனிதனை கொலை செய்பவனும்
மனிதன் தான்.
கொள்ளை அடிப்பவனும் மனிதன் தான்.
கூக்கிரலிட்டு  உதவிக்காக
அளிப்பவனும் மனிதன் தான்,
கூப்பிட்ட குரலுக்கு உதவ
ஒடிவருபவனும் மனிதன் தான்.
காதல் பாட்டுப் பாடுபவனும்
மனிதன் தான்.
பல்லாக்கினுள் அமருபவனும்
மனிதன் தான்.
பல்லாக்குத் தூக்குபவனும்
மனிதன் தான்.
குதிரையில் சவாரி செய்பவனும்
மனிதன் தான்.
குதிரைக்குப் பின்னால்.
ஹுக்கா-ஜாடி
எடுத்துக்கொண்டு
ஓடுபவனும் மனிதன் தான்.
மனிதனை மதிப்பவனும் மனிதன் தான்.
மனிதனை அவமதிப்பவனும் மனிதன் தான்.

 .
.







கருத்துகள் இல்லை: