திங்கள், ஜனவரி 09, 2012

siriya virunthaali--- புதிய சின்னஞ்சிறு விருந்தாளி


சிறிய  விருந்தாளி

அக்தர் சீரானி உருது கவிஞர்

a
எனது வீட்டு விருந்தாளி ,என் சிறு குழந்தை
அதன் மேல் ஒரு குற்றச்சாட்டு.
நீ வந்தாய்.அகமகிழ்ச்சி தான்.
வரவேற்கிறேன்.-ஆனால்
என் அன்பு மனைவியின்
முழு அன்பையும் நீ
கொள்ளை
  அடித்து  விட்டாய்.
நீ அவள் மனதைப்
பறித்துக்கொண்டாய்.
என்மன ஆசைகளை,
 மகிழ்ச்சியை 
எடுத்துக்கொண்டு விட்டாய்.
விருந்தாளியாக வந்து
என் ஆனந்தத்தைக்
கொள்ளை கொண்டாய்.
என்மனைவிக்குச் செல்லமாய்,
எனக்கு விரோதி யாய்,
ஆனாய் நீயே.
என் இல்லத்தரசியின்,
முன்னர் கிடைத்த அன்பு,
நீ வந்த பின்  கிட்ட வில்லை.
என்னை மறந்து
எப்பொழுதும்
 உன்னருகிலேயே
உள்ளாள்
.உன் வருகையால்,
பெரும் புரட்சியே
நடந்து விட்டது.
அவள்
உன்னைவிட்டுப்
பிரிவதே இல்லை.
என்னிடம்
அன்புகாட்டுவதும் இல்லை.
காதல் சமிக்ஞையும்
இல்லை.
என்னிடம் அவள் வருவது
கனவாகி விட்டது.
ஒரே வீட்டில் இருந்தும்,
தனியாக இருக்கப்
பழகிக்கொண்டாள்
உன்னருகிலேயே  இருக்க 
என்னிடமிருந்து பிரிந்து விட் டாள்.
என் படுக்கையும் உன் படுக்கை
ஆகிவிட்டது.
நீவந்ததும்.
வீடு உன் அதிகாரத்திற்கு
வந்துவிட்டது.
பணியாட்களுக்கும்
எனக்கு சேவை  செய்வதை விட
உனக்கு சேவை செய்யவே
விருப்பமாக உள்ளது.
நீ வந்ததும் எனக்கு
வசந்தமில்லாமல்
எனக்கு குழந்தைப்
பருவமில்லாமல்,
எனக்கு வாலிபமும் 
இல்லாமல்,
அனைத்தையும் 
எடுத்துக்கொண்டாய் .
இல்லம் வருவோரும்,
உன் நலம் தான்
விசாரிக்கின்றனர்.--என் 
நலம் விசாரிக்க 
ஒருவரும் இல்லை.
அன்பின் அவதாரமாகி,
என் அன்பையும் சேர்த்துக்கொண்டாய்  .

நீ

புதிய    சின்னஞ்சிறு  விருந்தாளி  

.






கருத்துகள் இல்லை: