வெள்ளி, டிசம்பர் 30, 2011

thulasidass eeradi

துளசிதாசர்  ஹிந்தியில் இராமாயணம் எழுதினார்.அது மக்கள் புரியும் அவதி மொழியில் எழுதப்பட்டதால் வால்மீகி சமஸ்கிருதம் மூல காவியத்தை   விட அதிகமாக பூஜிக்கப்படுகிறது.இன்று துளசிதாசரின் சில தோஹாக்கள் அதாவது ஈரடி களின் கருத்துரைகள் .படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

௧.துளசி கூறுகிறார்:---
மரங்கள் வளர்ந்து
 அந்த அந்த பருவங்களில்
 பழங்களைத் தருகின்றன.
அப்பழங்கள் சுவை
அப்பொழுதான் தெரியும்.
அவ்வாறே ஒரு மனிதனின்
 குறைகளும் நிறைகளும்
நேரம் வரும்போதுதான்
தெரியவரும்.
============================
௨.விளக்கு  ஏற்றியதும்
இருள்போய்
    ஒளி தெரியும்.
அவ்வாறே குரு
வந்ததுமே,
அறியாமை
இருள் நீங்கி
சீடர்களுக்கு
ஞான ஒளி
கிடைக்கும்.
=============================
௩.தேன்  பருகி இறப்பவனுக்கு,
விடம் தர வேண்டியதில்லை.
உலகை வெற்றி பெற்ற
பரசுராமர்,
ராமரின் இனிய   சொற்களாலும்,
பணிவாலும் தோற்றுப்போனார்.
தோற்ற ராமன் வென்றார் அவரை.
======================================
௪.தன் அனுபவத்தாலும் ,நன்கு விசாரணை   செய்தும்,
கண்டும் கேட்டும் துளசி  சொல்கிறார்---
கெட்ட மனிதன்  பட்டம் போன்றவன்.
பட்டக் கயிரை இழுத்தால் மேலே பறக்கும்.
தளர்த்தினால் தரையில்   விழும்.
கேட்டவனு அவ்வாறே.
=============================
௫.துளசி  கூறுகிறார் :-----
மற்றவரின் புகழை,
களங்கப்படுத்தி,
தன் புகழை உயர்த்துவோரின்
முகத்தில்  ஏற்படும்
களங்கம் அவர்கள்
இறப்பின் பின்னும் போகாது.
நிலையான களங்கம் ஏற்படும்.
==============================
௬.துளசி  கூறுகிறார் ,
 இரண்டு பெரியவர்கள்,
சண்டை  இடும்போது,
இடையில் சென்றால்,
அழிந்துவிடுவீர்கள்.--எப்படி
கல்லும் இரும்பும் உரசி மோதினால்,
எழும் நெருப்பின் இடையில் மாற்றிய ,
பஞ்சுபோல்.
====================================
௭.  நம்மைப்பற்றி  நன்கு அறியாமல்  ஒருவன் ,
நம்மைப் புகழ்ந்தாலும் ,இகழ்ந்தாலும் ,
அதைப்  பொருட்படுத்திஅதும் ,மகிழ்தலும் ,
வருந்துவதும்  வேண்டிய தில்லை.
----------------------------------------------------------------------
௮. தீராத  நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன்,
கடும் சொற்கள் பேசுவான்,தரித்திரன் ,பேராசைக்காரன்,
ஆகியோர் உயிர் நண்பராயிருந்தாலும் உடனே விட்டு ஒதுங்குவதே
சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
௯.மழை பொழிவதை  அனைவரும் பார்க்கின்றனர்.
சூரியன் மழை நீரை ஆவியாக்கி,மேகமாக மாற்றுவதை
யாரும் கண்டதில்லை.மழை நீர் கண்டு மகிழ்  கின்றனர்.
அவ்வாறு  மக்களுக்கு துன்பம் வராமல் வரிவசூல் செய்து,
கதிரவன் போல் ஆளுநர்கள் அதிர்ஷ்ட வசத்தால் நாட்டிற்குக்
கிடைப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------௧௦.துஷ்டர்கள்  தங்கள்  கெட்ட குணத்தை ,
நல்லவர்களுடன்  இணைந்தாலும் ,
விடமாட்டார்கள்.எப்படி பாம்பானது,
சந்தன மரத்தில் சுற்றியிருந்தாலும்,
விஷமில்லாமல் போகாது.
****************+++*****************************************************************





;



கருத்துகள் இல்லை: