வெள்ளி, டிசம்பர் 30, 2011

hindi poet vrunda --eeradi

ஹிந்தி கவி வ்ருந்தரின் ஈரடி.

1.அரசன் அழிவான் ஆலோசனை  தப்பானால்,
ஆன்மீக சாதுக்கள் சேர்க்கை தப்பானால் அழிவர்.
அன்பு அதிகமானால் புத்திரர்கள் அழிவர்.
அந்தணர்கள் கல்வி கற்கவில்லையானால் அழிவர்.
************************************************************
௨.இனிய சொற்கள் மருந்துக்கு ஒப்பாகும்,
கசப்பான சொற்கள் கூறிய அம்பாகும்.
செவி வழி சென்று,முழு உடலையும்
நடுங்கச்செய்யும்.
*************************************************************
௩.எதையும் அறியாமல்,காணாமல்,தீர விசாரிக்காமல்,
சிந்திக்காமல்,மற்றொரு வரைப்பற்றி
 எப்படி கருத்துக் கூற இயலும்.?
கிணற்றுத் தவளை கடலின்
விஸ்தீரணம் எப்படிக் கூறும்.?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
௪. வீரனின் வேடம் தரித்தாலும்,
கோழை வீரனாக முடியாது.
சிங்கத்தின் தோல் போர்த்தினாலும் ,
நரி சிங்கமாக முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
௫.முட்டாளும் தன் இடைவிடா,
முயற்சியால்,பயிற்சியால்,
மேதை ஆகலாம்.
கல்லும் கயிறு பட்டு ,
இழுக்க,இழுக்க குழியும்.
++++++++++++++++++++++++++++++++++++++++===




கருத்துகள் இல்லை: