வெள்ளி, டிசம்பர் 30, 2011

புத்தாண்டு ௨௦௧௨,

புத்தாண்டு ௨௦௧௨,
 புதிய தலைமுறையினர்
மனதில்,
இன்றைய திரைப் படத்தாக்கங்கள் இன்றி,
பெற்றோரின் நிலை அறிந்து,
காதல் உணர்வே பெரிது என்று,
தோல்வியால் தற்கொலை,கொலை,
மதுமயக்கம்,மாது மயக்கம்,
கள்ளக்காதல்,கூலிப்படை,என்ற
எண்ணங்கள் வராமல்,
இறைவணக்கம் எண்ணங்கள் தோன்றி,
ஆமைபோல்  ஐந்தடக்கல்  ஆற்றி,
வளமான வருங்காலம் அமைய,
௨௦௧௨ ஜனவரி திங்களில் என் பிரார்த்தனைகள்.
துளசிதாசர் பெண் பித்தர்,
அவர் மனைவி  அவரைத்திருத்த,
கூறி மொழிகள்,
எழும்பும் சதையும்,
கொழுப்பும் அழகும் உள்ள
 இந்த உடலின் அழகு
நிலையற்றதல்ல.
அழியும் உடலாசை தவிர்த்து,
ஆண்டவன் மேல் பற்று கொண்டால்.
அவனியில் தங்கள் பெயர்,
புகழ் ஓங்கி  நிலைத்திருக்கும்.
அவ்வாறே அருணகிரியின் அவல வாழ்க்கை,
ஆன்மீகத்தால் முருக பக்தியால்
தமிழுக்கு பெருமை சேர்த்தது.
அவர்களின் பட்டறிவு அறிந்து,
இளமை நிலையாமை என்பதை
நினைவில் கொண்டு ,
நானிலம் போற்றும் உத்தமர்களாக,
மாணவர்களுக்கும் ,மக்களுக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.






கருத்துகள் இல்லை: