செவ்வாய், டிசம்பர் 13, 2011

Bharath peak of the wold.bharatham baarin sikaram

பாரதம் 
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம்,
சாரேன் ஜஹான் சே அச்சா,
ஹிந்துஸ்தான்  ஹமாரா ஹமாரா.

நீர் அதன்  புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் ..
என்றான்  பாரதி. அவன் தீர்க்க தர்ஷி.
அதாவது தொலைநோக்குப்பார்வை .
               பாரத
 வரலாறு அறிந்தவன்.
அவனுக்கு அம்பியையும் தெரியும்.
ஆம்பியையும் புருசோத்தமனையும்
தெரியும்.எட்டப்பனையும் தெரியும்.
ஏமாற்றுக்காரர்களையும் தெரியும்.-அதனால்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றன்.
இன்றும் ஜாதி அலை ஓயவில்லை.
தேர்தல் என்றாலே ஜாதி தான் முதலிடம்.
அனைத்து விண்ணப்பங்களும் ஜாதி
கேட்டு தான் அச்சடிக்கப்படுகின்றன.
காரணம்?
அவை இருந்தால் தான் அரசியல் நடத்தமுடியும்.
மக்களை ஏமாற்றமுடியும்.
அக்ரகாரங்கள்  ஆங்கிலம் படிக்கின்றன.
காயத்த்ரி மந்திரம் சந்தியா வந்தனம்
எங்கே பிராமணன் தொடரில் புரிந்தன,

பொருள் தேடும் உலகு தான்.
அருள் தேடும் உலகு  பொருள் இருந்தால் தானே.?
பாரில் பாரதம் சிகரம் என்று போய் ,
baril தான் நாட்டு நல திட்ட வருமானம் என்ற நிலை.
பார்  பார் baaril  வருமானம் பார்.
bottle    பெற்றுவோட்டு போட்டுப்பார்.
மயக்கத்திலே மதி மயக்கத்திலே
baarukkuppo  நாட்டு நலத்திட்ட வருமானம் கொடு.
வீட்டு நலம் குடும்ப நலம் மற
சுய நல அரசியலால்  சரக்கை ஏற்றி,
பொது சொத்தை நாசமாக்கு,
அது நம் வரிப்பணம் என்பதை மறந்து விடு.
சாலைகளில் பள்ளம் தோண்டு,
தண்டவாளத்தைத் தகர்த்து விடு.
அரசுப்  பேருந்தை கலவரம் என்று   எரித்துவிடு.
குண்டர்களை கூலிப்படைகளை,
அரசும் நீதித்துறையும் காவல் துறையும்
கண்டு கொள்ளாது.
அப்பாவி  பொதுஜனங்களை  அப்  பாவி
அரசு   கொன்று குவிக்கும்.
தேர்தல் வந்தால் கறுப்புப் பணம்.
பெற்று  நல்லவர்களுக்கு வாக்களிக்காதே.

இவை எல்லாம் தெரிந்தே முண்டாசுக்கவி
மீசை முறுக்கிக் கூவினான்,
பாரத நாடு பாருக்கெல்லாம் ,திலகம்
இன்னினைவை  அகற்றாதீர்  என்று.
அவனுக்குத்தெரியாது,
பார்.  இன்றைய பாரதம்  bar  ஆகும் என்று.   ,



   
um

கருத்துகள் இல்லை: