செவ்வாய், டிசம்பர் 13, 2011

 போதி மரத்தில் அவன் பெற்ற ஞானம்,
ஆசையைத்  துறந்து அஹிம்சை,
அன்பு ,வாய்மை,தொண்டு  என்று
அவரை ஆசிய ஜ்யோதி ஆக்கியது.
இன்றைய அரசியல் வாதிகள்,
அவர்கள் சேர்க்கும் சொத்துக்கள்,
அவர்களின் ஊழல்கள் ,
நீதித்துறை,காவல் துறை
அனைவரின் அமைதி
நீதியின் தீர்ப்பில் தாமதம்,
இது புத்தர் பிறந்த நாடா?
அவர் சீடரான அசோகர்
மனம் திருந்திய நாடா,
நாட்டின் பணம் ,
கருப்புப்பணம்,
ஊழல் பணம்,
வெளி நாட்டு வங்கிகளில்,
நாட்டுக்கு துரோகம்,
தீமை ,
இந்த துரோகிகள் ,
நிரந்தரமாக,
இருப்பவர்களா//?
இதற்கு சட்டம் கொண்டுவராமல்,
இவர்கள் பட்டியலை
வெளியிடாமல்,
ஆதரவளிப்பவர்கள்,
ஆத்மா சோதனை செய்யாமல்,
மனசாட்சி இல்லாமல் உள்ளனரே.
ஆண்டவன் உள்ளானா?
அவன் லீலை.கர்மவினை என்ற
ஆன்மீக வாதிகள் சப்பைக்கட்டுகள்,
அராஜகம் வளர்க்குமே தவிர
தர்ம வான்கள்  உள்ளம் குமிரிக்கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை: