விரும்பியவளின்  நினைவு 
அது  விரும்பியவள்  விரும்பாவிட்டால்.
சீ"சீ " இந்தப்பழம் புளிக்கும் என்பதே 
சிறுவயதில் நான் படித்த கதை.
நினைவலைகள் ஆழ்  கடலாக
மன அலைகள் அமைதியாக,

ஓரக் காற்றை ஓரங்கட்ட .
ஒரே வழி  கடமையாகும்.
அதற்கென்றே ஆழ் நிலை தியானம்.
ஆன்மீக வழி ,பிராணாயாமம் .
ஐந்துநிமிட மூச்சு உள்மூச்சு ,வெளிமூச்சு.
நீ  மனிதன் . நினைவலைகள் வாட்டும் போது 
நிராசை அடையாதே.
நானிலத்திற்கு 
பணியாற்றும்  நற்செயலில் மனம் செழுத்து.
விரும்பியவள் விரும்பாவிட்டால்.
அது நட்பா,சதைப்பற்றா  நினைத்துப்பார்.
எதுவுமே  அழுகும் நிலை.
இதை சமுதாயம் இயம்பமறுப்பதால் ,
இளைஞர்கள்  நிலை,
புத்தரை நினை.
உலகம் மாறுகிறது .
உள்ளம் மாறும்.
நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா 
என்பது  உலகியல்.

மறக்க முடியும் என்பது அற  இயல்.
அறம்  நிலையானது.
அவளின் நினைவு அகவை கூடக்கூட 
அழியக்கூடியது.
நீ ஆறு  அறிவு  படைத்த மனிதன்.
நினைவலைகளை  இப்பக்கம் 
திருப்பும் ஆற்றல் மனிதனுக்கே உண்டு;
ஆகையால் தான் 
நன்றிக்கு நாய்.
நாய் போல் நாறாதே; அலையாதே 
என்ற வசவுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக