வியாழன், நவம்பர் 01, 2012

சில பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.பாரதம் ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத ஒப்பில்லாதநாடு.

சில  பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.


எனது ஆசிரியர் தொழில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருவிதமான மனக்கட்டுப்பாடற்ற பாலியலில் ஈடுபடும் மாணவர்கள்  இதனால் பலரின் பாதிப்பு.தனியார் பள்ளிகளில் ஒருவிதமானபாதிப்பு 
அனைத்திற்கும் பெற்றோர்களும் சமுதாயமும் பணத்தாசைபிடித்த வியாபாரிகளும் தான் காரணம்.

எனது ஆசிரியர் தொழிலில் முதல் அதிர்ச்சி.

நான் ஒரு  ஐ.சி.எஸ்.சி   அங்கிகாரம் பெற  முயற்சித்த ஒரு பேரூரில் தான் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.அப்பள்ளியில் ஒருநாள்  யு.கே.ஜி .வகுப்பில்படிக்கும் ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் வகுப்பில் காண வில்லை. வகுப்பறையின் பின்னால் இருந்த சிறு சந்தில் இருந்தனர்.
அவர்கள் இருந்த நிலையில் ஆசிரியை கோபத்தால் திட்டி அழைத்துவந்தார்.
அந்நிலைக்கு அவர்கள் பெற்றோர்தான் காரணம் .பெற்றோர் உறவில் ஈடுபட்டதை  கண்ட குழந்தைகள் அதே நிலையில்  பள்ளியின் பின்புறத்தை 
பள்ளி அறையாக பயன்படுத்த முயன்ற பிஞ்சுகள்.
இது பெற்றோர்கலால்பாதிப்பு.இளம் தளிராக இருக்கும்போதே.
இது பல பிஞ்சுகளில் நஞ்சு சேரக்காரணம்.

சென்னை மாநகரில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்த பொழுது பல மாணவர்கள்  சாவிக்கொத்து பரிமாற்றம்.அவர்களுக்குள் பேச்சு.அதுவும் ரகசிய முறையில்.பின்னர் தெரிந்தது சாவிக்கொத்தில்பலானா படங்கள்.அதுவும்  பள்ளி அருகில்  உள்ள நடைபாதை வியாபாரிகளால் .பள்ளியின் தேர்ச்சி விகிதம் 25-40%
பின்னர் அறிவியல் வளர்ச்சி .பெருமைபெறும் அளவில் .
படங்கள்.குறுந்தகடுகள். அதிலுள்ளபாலியல்காட்சிகள்.
என்னைபோன்று நகரத்திற்கு பணியில்வரும் ஆசிரியர்களுக்கு  அதிர்ச்சியும் ஆவலும்  இதனால்பல ஆசிரியர்களுக்கும் பாதிப்பு.
இதில் அதிகம் பாதிக்கப் படுவோர்கள் மாநகர  பள்ளி,அரசு உதவிபெரும்   பள்ளி மாணவர்கள்.
பலபள்ளிகளில்  மாணவர்கள் எண்ணிக்கை குறைத்துவிட்டது.
காரணம் 
ஆசிரியர்கள்கடுமையாக தண்டிப்பதை  பெற்றோர்கள்,மாணவர்கள்,சில ஆசிரியர்கள்,அரசு யாரும்விரும்பவில்லை.
மனோதத்துவ முறையில் திருத்த பள்ளிகளில் வசதிகள் இல்லை.
ஆசிரியர்களும் அவர்களை கண்டிக்க முடியவில்லை.அறிவுரையால் தான் திருத்த  முயல்கின்றனர். ஆனால் நகரத்தில் சிறு வீட்டில் ஒரே அறையில் வாழு ம்பெற்றோர்கள்.
அந்த 16--19 வயதில் உள்ள மாணவர்கள் பெண்கள் பின்னால் சென்று தவறுகள் 
செய்கின்றனர்.
அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள்,ஒழுக்கம்,புலனடக்கம் 
கற்றுக்கொடுக்க சரியான கல்வி முறை,பெற்றோர்கள்,திரைப்படங்கள்,திரைப்பட பாடல்கள் 
பெரியவர்கள்   சூழல் அமையவில்லை.
அன்பழகன் இயக்கத்தில் வெளியான "சாட்டை"கல்வித்துறைக்கு 
ஒரு சாட்டை அடி.
அதுதான் நீயா,நானா  நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசாமல் 
வயதுக்கோளாறு என்று கூறப்பட்டது.
மேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டில் நுழைந்து வளர்வதும் 
இந்த  கணினிப்  பயன்பாடு.

இந்த சூழ்நிலையில் யோகா,ஆன்மிகம் கலந்த ஒரு பாட திட்டம் அவசியம்.
அமெரிக்கத் தேர்தலில் ஒட்டு போடுவோர்களுக்கு இலவச யோகா வகுப்பு விளம்பரம்.
அது நம் நாட்டு உயர்கலை. 
இங்கு மறக்க ,மறைக்கப்பட்டு 
நல்லதை உடனடியாக ஏற்கும் அமெரிக்க நாட்டில் வளம் பெறுகிறது. 
ஜாதி,இனம் ,மதம் பார்க்காமல் நல்லதை ஏற்றால் நாடு நலம் பெரும்.
நம் நாட்டில் தான் சுயநலம் ஜாதி,மத,இனம்  என்ற பெயரால் 
தடைக்கற்களாக பயன் படுத்தப்படுகின்றனவே.

நாட்டின் முன்னேற்றம் என்ற செயல்பாடு 
சுயநலமற்ற முறையில் இன மத,ஜாதி,மொழி  வேறு பாடு 
கருதாமல்  நடந்தால் 
பாரதம்  ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத 
ஒப்பில்லாதநாடு.


கருத்துகள் இல்லை: