வியாழன், நவம்பர் 01, 2012

பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

நான் 16 வயதிலிருந்து ஆசிரியர். அதுவும் ஹிந்தி ஆசிரியர்.என்னிடம் ஹிந்தி பயில வந்தவர்கள் 
6 வயது முதல் 70 வயதுவரை.
பல வித பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்.
கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆசிரியராக 
மெட்ரிக் பள்ளி,மத்திய அரசுப்பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி,ஹிந்தி பிரசார் சபை என்று பலவித மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் அனைவரும்  நல்லவர்கள்.
சனாதன தர்மத்தில் பிரமச்சரிய  விரதத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
புலனடக்கம் பற்றி பேசினர் .
வள்ளுவரும் 
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் 
ஏமாப்பு உடைத்து என்றார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும் -என்றார்.
இது வெறும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்று  யாரும் கடைபிடிக்கவில்லை.
கோயிலில் ஆன்மீகம்  கலந்த பாலியல் கல்வி 
அளித்தனர்.
ஆனால் கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாதம்.
அறிவியல் முன்னேற்றம்.  சமுதாயத்தை 
சீரழிக்கிறது.
விந்து சிந்தினால் நொந்துசாவான்  -என்ற 
சித்தர் வாக்கியம் சிரிப்புக்காளாகி ,
ஆங்கில டாக்டர் சொன்ன 
தேநீர் அருந்துவதுபோல் உடலின்பமும் 
ஹஸ்த மைத்துனமும் சாதரண மாகியது.
பேராசிரியர் முதல் தமிழருவி வரை 
காதலிக்கும் வயது அப்படி இப்படித்தான் 
காளை  வயதில்.
அழகுதேவதைகள் நடமாடும்கல்லூரிகளை 
நாடும் வயது  அது என்றனர்.
அறிவுரை கூறுபவர்கள்  இக்காலத்தில் 
மனக்கட்டுப்பாடு என்று  கூறாமல் ,
மனம்போன போக்கில் பெண்கள் பின்னால் சுற்றுவது தான் ஆண்மை  என்ற 
இளைஞர்களை திசை திருப்பும் 
திரைப்படங்கள்,பாடல்கள்.
அதே எண்ணங்கள் இன்று  பெண்கள் மனதிலும்.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக் இட் ஈசி  பாலிசி.
ஆங்கிலத்தால் வந்த வினை.
வேண்டாதவர்கள் பேசினால் எதிர்ப்பு.
கல்யாணம் ஓடிப்போய் கட்டிக்கலாமா?
பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?
இது ரசனை.
காதல் கலாட்டா ,
ஒருபெண் நாய் முன் பல ஆண்நாய்கள் சுற்றுவதுபோல் 
 சுற்றினால் காதல் என்று 
இளைஞர்களை கெடுப்பது யார்?
ருஷ்ய ஸிங்கர்  என்ற ஒருவரை அவர் தகப்பனார் 
பெண் வாசனை இன்றி வளர்த்தார்.
அதிலிருந்து 
காதல் கட்டுப்பாடு மனிதன் தன்  மனக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடியது.
அதை தூண்டிவிடும் நூல்கள்,படங்கள் 
இளைஞர்களை  பலகீனப்படுத்துகிறது.
பலன் 
காதலை மறுத்தால் ஆசிட் வீச்சு,கொலை,
காதலித்து ஏமாற்றி குழுவாக கற்பழிப்பு என 
இரக்க  மற்ற உணர்வுகள்.
காளையர்கள் மனக்கட்டுப்பாடு இல்லை என்ற நிலை 
அதன் பலன் கள்ளக் காதல்.
கணவன் கொலை.
மனைவி கொலை.
கள்ளக்காதல்பார்த்த குழந்தை கொலை.
நல்லதை பரப்புவர்கள் குறைந்துவிட்ட காலம்.
ஆன்மிகம் பாலியல் குற்றத்தை தவிர்க்கும்.
சமுதாயம் 
நம் சித்தர்கள் காட்டும் வழியில் செல்லவேண்டும்.
ஆனால் அது வயதானவர்களுக்கு என்று 
ஒதுக்கி வைத்துவிட்டு 
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்ற 
திரைப்படத்திற்கு 
முக்கியத்துவம் அளிக்கிறது.
அனுபவத்தின் மூலம் எதிர்கால
 இளைஞர்கள்  வாழ்க்கை வளம் பட 
கூறுவது 
ஏளனம் செய்யப்படுவதால்  தான் 
விவாகரத்துக்கள் நீதிமன்றங்களில் 
அதிகமாகிறது.





கருத்துகள் இல்லை: