புதன், அக்டோபர் 31, 2012

ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.

.

        நான்  ஆசிரியர் பணி  ஆற்றத் தொடங்கியது பதினாறு  வயதில்.எனது குடும்ப சூழல்  அம்மாவின் கடும் உழைப்பு   தேசீய நீரோட்டத்தில் இந்திய தொடர்பு மொழி ஹிந்தி பிரசாரம்.இதில்  வாழ்க்கை நடத்த  வருமானம். என் தாயார் தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்ததால் லக்ஷ்மிவிலாஸ் வங்கி மேலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் அவர்கள் மனைவியின் தூண்டுதலால் ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.மாதக் கட்டணம் நாலணா,எட்டணா .என் அப்பாவிற்கு  உழைக்கத் தெரியும்.உழைப்பைப் பெறுபவர்கள் ஊதியம் கொடுக்க தயங்குவார்கள்.கொடுத்தாலும் தன் அண்ணன்   குடும்பத்திற்கும்,ஏழை எளியவர்களுக்கும் போய் சேரும்.அதனால்,எனது தாயார் கோமதிஜி  1953இல் இருந்து ஹிந்தி பிரசாரத்தை ஆரம்பித்தார்.நான் பிறந்த பின் பழனி அரசு பெண்கள்  மேல் நிலைப்பள்ளியில்  படித்தார்.
அதனுடன் ஹிந்தி தேர்வுகளும் .
தாயாரின் ஹிந்தி அறிவு எனக்கும் இயற்கையாக வந்தது.
அவருக்கு முதல் அரசு நியமனம் கொம்புக்கார நேண்தல் என்ற கிராமம்.முத்தனேந்தல் என்ற ரயில் நிலையத்தில்  இறங்கி ஐந்து ஆறு மையில்  நடந்து செல்ல வேண்டும்.பேருந்து வசதிகள் கிடையாது.
பின்னர்  சிங்கம்புணரி பள்ளியில் பணி புரிந்தார்.ஹிந்தி ஆசிரியை.அக்கம்பக்கத்தில் ஹிந்தி எதிர்ப்பு. அமைச்சர் மாதவன் அவர் உறவினர்கள் பக்கத்தில்.ஆதரவு.ஹிந்தி அரசுமொழி ஆவதற்குத்தான் அவர்கள் எதிர்ப்பு. ஹிந்தி விரும்பி கற்போருக்கு என்றுமே தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கிடையாது.அதனால் தான் இன்றும் தமிழக அரசின் எவ்வித உதவியும் இன்றி ஆயிரக்கணக்கில் ஹிந்தியால் பொருளீட்டுவோரும் ,லக்ஷக்கணக்கில் ஹிந்தி படிப்போரும் இன்றும் உண்டு. ஆனால் ஓய்வின்றி ஹிந்தி பிரசாரம் உண்மையாக செய்வோருக்கு வருமானம் இல்லை.
அரசுக்கல்லூரி,பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும்  ஊதியம் அதிகம்.அதுபோல் மத்திய அரசு ஹிந்தி அலுவலர்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் ஊதியம் அதிகம்.
இன்று இந்தி பிரசாரம் பிரசார சபைஇந்தி பிரச்சாரகர்களின்  நலனைவிட,அதாவது லக்ஷக்கணக்கில் மாணவர்களை ஹிந்தி  பயிலவைக்கும்  பிரச்சாரத்தை விட்டு விட்டு,மத்திய அரசுபள்ளிகள், கல்லூரி என்பதில் ஈடுபடுகிறது.முழு நேரத்தில் ஹிந்தி பிரசாரம் செய்தல் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான்.
ஆனால் ப்ரசாரர்களிடமும் ஒற்றுமை இல்லை.
அங்கும் தேர்தல்.வழக்கு.ஊழல். வேலை நிறுத்தம் அனைத்தும்.
எப்படியோ  நான் வளர்ந்தது,ஒரு சமுதாய அந்தஸ்து பெற்றது,உலகப் புகழ் பெற்ற ஹிந்து மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றது  எல்லாம் ஹிந்தியால் தான்.ஆனால் எனக்கு தமிழார்வம் அதிகம்.
தாய் மொழி தெலுங்கு.படித்தது வளர்ந்தது,ரத்தத்தில் கலந்தது தமிழ்.வருமானம் ஹிந்தி.
ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.




கருத்துகள் இல்லை: