புதன், ஆகஸ்ட் 01, 2012

private schools in tamilnaadu and language policy.

கல்விக்கூடங்கள்  1970 க்குப்பின்  வணிக நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டு ,

அரசின் பல் துறைகள் போன்று வசதி படைத்தவர்கள் விரும்பும்
 தனியார் துறை  யாக மாற்றம் அடைந்தது  ஏன்?

இதில்  கல்வித்துறை  அமைச்சகம்,இயக்குனர்கள்,தலைமை ஆசிரியர்கள்,

ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,அரசியல்வாதிகள் ,பத்திரிகைகள் ,அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்கள்  என  அனைவரின் ஒத்துழைப்பு
இல்லாமல்  தனியார் பள்ளிகள் வளர முடியுமா?

கல்வி இன்றியமையாத செல்வம்.    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக  கல்வி அவசியம்  என்ற நிலை ஏற்பட்டபின்

கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வுகள்  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போல் மாறிவிட்டன.

காரணங்கள்:
1.தனியார் வழியிடும்  புத்தகங்கள் ,குறிப்பேடுகள்,கழுத்துப்பட்டை,காலனி,
சீருடை, பேருந்துவசதிகள், எழுது  பொருட்கள் ,விளயாட்டுப் பொருட்கள்,
பள்ளி விளையாட்டுத்திடல்  என அனைத்தும்  தனியார் பள்ளிகள்
கவர்ச்சிக்கு ஒரு மூல காரணம்.
2.ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் ,முதல்வர்களின் கடும் உழைப்பு.

3.கல்வி என்பதை  பெற்றோர்கள்  ஆங்கில வழிதான் என முடிவு எடுத்தாது.

4.தமிழ் வழி   ,இந்திய மொழி வழி  படிப்புகள்

வேலைவாய்ப்புத்தராததால்  ஆங்கிலம் தான் என்ற நிலை.

5.ஆங்கிலம் கலந்து தமிழ் மொழி பேசாவிட்டால் அவன் அறிவு வளர்ச்சி இல்லை என்று   அவமானப் ப்படுதல்.

6.தமிழ்  நாட்டில்  தமிழ் படிக்கவேண்டாம்.
.முதல் மொழி வடமொழி.பிரெஞ்சு எடுத்தால்
  ஒரு பாடம் சுலபமாகி றது .
 மதிப்பெண்களும் அதிகம் கிடைக்கும்.

அண்ணாதுரை  அவர்கள் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த போது

மும்மொழி திட்டம் கொண்டுவர முயன்றார்.

 அதில் தெலுங்கு மொழிக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 தோல்வி  அடைந்தது .

        தமிழகத்தில்  உள்ள 40%அதிகமாக உள்ள தெலுங்கர்கள் தங்கள் தாய்

மொழி படிக்கவேண்டும் என்ற  எண்ணமே இல்லாதவர்கள்
.தமிழை மிகவும் நேசிப்பவர்கள் .
 திரு வை.கோ.,விஜயகாந்த்,ஈவேரா .உட்பட
.மாண்புமிகு  முதல்வர்  அண்ணாத்துரை கொண்டுவந்த  திட்டத்தில்

 ஹிந்தி படிப்பதில்பெற்றோர்கள்  அதிகம் ஆர்வம் காட்டியதால் திட்டம்

கைவிடப்பட்டது.

பின்னர் பள்ளி நேரத்திற்கு ப பின் ஹிந்தி கற்பிக்கும் ஒரு திட்டம் வந்து  கைவிடப்பட்டது.

ஹிந்தியை விரும்பா அரசியலில், ஆங்கிலம் மகத்துவம் பெற்று தமிழை

விரும்பா மொழியாக்கியது என்பதுதான் உண்மை.

பொதுவாக மக்கள் விரும்புவது தனியார் துறை தான்.
பணம் சிலவானாலும் நிம்மதி.
அரசுப்பள்ளிகளில்  தனியார் பள்ளி போன்று பொறுப்பு ஏற்பது கிடையாது.
ஐந்து ஆண்டுகள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்காமல் இல்லை.

இன்று தனியார் பள்ளிகள் விலைவாசி ஏற்றத்தால்  மிகவும் கலக்கத்தில்
உள்ளன .

ஆசிரியர்கள்  ,ஆயாக்கள்   aஅனைவருக்கும்  ஊதியம் kகொடுக்க vவேண்டும்

பொருளின்றி   ஆண்டவன்   தரிசனமே  ஆலயங்களில்  தாமதமாக  கிடைக்கும் .

அறிவாலயங்கள்  என்றுமே அரசபோகம் தான் .







கருத்துகள் இல்லை: