ஞாயிறு, ஜனவரி 08, 2012

MULLUM MALARUM HINDHI KAVITHAI TAMILAAKKAM

முள்ளும் மலரும்


மலரும் முள்ளும் ஒரே செடியில்,
கதிரவன் ஒளியும்,சந்திரன் ஒளியும் ,
மாரியின் நீரும்,வீசும் காற்றும்,
அவைகள் மேல் இரண்டுக்கும் ஒன்றே.

ஆனால்,

மலரின் மணம்,
மலரின் மென்மை,
மது தரும் மாண்பு,
வண்டுகளிடம்
காட்டும்
அரவணைப்பு,
மனம் பெறும்,
மகிழ்ச்சி,
கண்களுக்கு  
குளிர்ச்சி.

அதே  செடியில்.
முட்கள்,
வண்டுகள்
உடலில் குத்தி,
தொடுவோரின்
உடலையும்,
உள்ளத்தையும்
புண்ணாக்கும்.
இன்னல் இயல்பு.

இப்படைப்பு,
இத்தோற்றம்.
இக்குணம்,
யார் குற்றம்??




கருத்துகள் இல்லை: