வியாழன், டிசம்பர் 15, 2011

punch dialogue aluththum uruththum vaakkiyangal

ஆலயம் தொழுவது சாலவும் நன்று  என்ற ஆன்றோர் வாக்கு,
ஆனந்தமளிக்கும்,
ஆத்ம சுகமளிக்கும் ,
 உள்ளத்தில் அமைதி பிறக்கும்.
அனுபவ பூர்வ எனது அநூபூதி  இது.
அகவை கூட கூட
 இந்த உணர்வு மேம்பட்டாலும்,
ஆலயங்களில் கூட்டங்கள் அதிகரித்தாலும்,
தவறுகள் அங்கங்கு தெரிய அறிய வந்தாலும்,
ஆன்றோர் வாக்கு பொய்ப்பதில்லை.
ஆலயமில்லா ஊரில் ,குடியிருக்க வேண்டாம்
என்ற ஆன்றோர்  வாக்கு, சத்ய வாக்கு,
அறிவுள்ள நரன்,நரிபோன்று இருப்பதால்,
அறத்திற்கு எதிரான ஆணவத்தால் அழிவதால்,
ஆலயங்கள் பெறுகிவருகின்றன சாலை தோரும்,
நடைபாதை ஆலயங்கள்,அங்குள்ள முடக்கக் கண்ணி,
திருவீதி அம்மன் ,காளிஅம்மன், மாரியம்மன்,
பயங்கர உருவமுள்ள பிரத்தியங்கரா தேவி,
நரசிம்ஹன்,கருப்பணசாமி,முனிசாமி,மாடசாமி,
சப்தகன்னிகள்,பயங்கர சூலாயுதங்கள்,வேலாயுதங்கள்,
அப்படி இருந்தும் ஊழல்கள்,அநீதிகள்,
அதனால்தான் ஆண்டவன் துதி,நாட்டைக்காப்பற்ற,
கலியுகத்தில் கண்முன் இறைவன் தண்டனைகள்.
அரசன் அன்று என்பதற்குப் பொருள்,
அரசன் அல்ல அநீதிக்குத்  தண்டனை தருபவன்,
ஆண்டவனே!ஆண்டவனே!ஆண்டவனே!
அதனால் தான் அரசன் அன்று!!(அல்ல)
 கொல்வான் ஆண்டவன் நின்று
நினைத்தவுடன்,திருந்த  வாய்ப்பளித்து,
அதனால்தான் அவன்
 அருள் பெற்றவனால்
அனைவரும் விரும்பும்
 பஞ்ச் டயலாக்  ----
ஆண்டவன்  நல்லவங்களை  சோதிப்பான்,
கைவிட மாட்டன்,
கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்
கைவிட்டு விடுவான்.
சிந்திப்பீர்!! செயல் படுவீர்.!!   


1 கருத்து:

Sharadha சொன்னது…

Hindi sir ah irundhuttu tamil la dhool kilapareengale sir eppadi adhu? :)