வியாழன், மே 03, 2012

education

அன்பு  அறம் அகலா சமுதாயம்.ஆனந்தமுள்ள  ஆற்றல்  மிக்க சமுதாயம்.
படித்து  பணம் சம்பாதிப்போரால் முடியுமா?
கற்றோர்  கற்ற கல்வி குறைந்த சிலவானால்
கடமை சேவை அன்பு அறமாகும்.
கல்லூரியில் சேரவே லக்ஷங்கள் கறுப்புப் பணமானால்,
கள்ளக் கணக்கு,அநீதிக்கான வழக்கு ஆடல்.
குறுக்குவழியில் பணம் தேடல் என,
சமுதாயம் ஒரு சாபக்கேடாகும்.
கற்றோரால் தான் வருமான வரி  குறைப்பு.
சட்டத்தை ஏமாற்ற வழி  காட்டுதல்.
லக்ஷங்கள் சிலவு செய்து மருத்துவரானால்
சேவை லட்சியங்கள் பறந்தே போகும்.
பரந்த மனப்பான்மை குறுகிப்போகும்/
கட்டணங்கள்  கல்விக்கே அதிகமானால்
கடன் சுமைகள் அதிகமாகும்.
பெற்றோர் கடன்,தன கடன்
என்ற நிலை தன்னிலை  மறக்கச்செய்யும்.
ஐந்தாண்டில் செலவு செய்யும் பணம்
தேடும் அரசியல் வாதிக்கும்.
கல்விக்கு  முதலீடு செய்த கல்வி  பயின்றவனுக்கும்
முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள் ,கடைகள்
நடத்துவோருக்கும்  வேறுபாடு வெளிச்சமாகும் .
ஏழைகள் வாழ அருகதை இல்லை என்ற நிலை
உண்மையாகும்.


  

கருத்துகள் இல்லை: