திங்கள், பிப்ரவரி 06, 2012

uravukal

புதிய செய்திகள்,புதிய பாடல்கள்,புதிய கண்டுபிடிப்புகள்,புதியவைகள்
எழுத  பலர் விரும்புகின்றனர்.பழமை விரும்பிகள் இன்று பழமை பற்றி எழுதுபவர்களும் அவர்கள் காலத்தில் புதுமையை விரும்புவர்களாகத்தான்
இருந்திருப்பார்கள்.

இளம் வயதில்   விரும்பும் புதுமை ,முதுமையில் வரும் புதுமையை


விரும்பாமல் பழமையின் சிறப்பைப் பாடுகிறது,
காரணம் புதுமைகள் மனித இனத்தை இயந்திரமயமாக்குவதுதான்.
நாளுக்கு நாள் உறவுகளின் அன்பு குறைந்து வருகிறது.தான் அதிகம் சம்பாத்திதால்  உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வதை தவிர்த்து நண்பர்களுடன்
பகிர்வதே சிறப்பானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
இன்றைய உறவினர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை காரணமாக அந்தஸ்த்திலும்,பொருளாதாரத்திலும் உயர்ந்த உறவினர்களை நாடிச்செல்வதில்லை.உயர்நிலையில் உள்ளவர்கள் உதவ நினைத்தாலும்
அவர்கள் மனம் ஏற்பதில்லை.
மற்றவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி நாணயமாகக் கொடுப்பவர்கள்,உறவினர்களிடம் வாங்கவும் விரும்பவில்லை,வாங்கினாலும்
திருப்பிக்கொடுக்க விரும்பவில்லை.
உறவினர்களின் குறிகிய எண்ணங்கள் பொறாமையிலும் விரோதத்திலும் குரோதத்திலும் தான் முடிகின்றன.விரிசல் ஏற்படுகின்றன.இது புதுமையல்ல என்பதற்கு இராமாயண மகாபாரத மற்றும் வரலாற்று சான்றுகளும் கிடைக்கின்றன.
அதனால் தான் நல்வழிப்படுத்த பல நூல்கள் பழமையில் உள்ளன.
அதை கண்டு மனம் தெளிவது இன்றைய இளம் தலை முறையினர்களுக்கு அவசியம்.
இந்நோக்கில்    பார்த்தால்  இராமாயணம்,மகாபாரதம் கற்பனைக்  கதைகளோ  என தோன்றுகிறது. . 

கருத்துகள் இல்லை: