சனி, டிசம்பர் 24, 2011

jesus greetings/BALAM PERUKKUNGAL.

அன்பே என்றும் தேவை ,
ஆதரவற்றோர்அனைவரின் ,
இன்னல் களைய ,
அவதரித்தார்
 ஏசு.
இறைவனை
வழிபட்டு,
ஈகை புரிந்து,
உள்ள அமைதி
பருகுங்கள்  என்றார்,
எங்கள் ஏசு.
பாவங்களைக்
கூறி,பாவமன்னிப்புப் பெற்று,
பாரினில்,பாவமின்றி,\
வாழ வழிகாட்டி,
குருதி சிந்தி,
குற்றங்கள் சுமந்து,
சிலுவை சுமந்து,
இறந்து உயிர்த்தெழுந்து,
இன்னல் களையும்,
இறைத்தூதர்
ஏசு.
தூய மனப் பிரார்த்தனை,
துயரம் தீர்க்கும் என்று,
நோய் தீர்க்கும் என்று,
மன ஆசைகள் நிறைவேறும்
என்று,
எளிய வழி
 கூறி,
அன்பால்
அரவணைப்பால் .
தொண்டால்,
அகிலத்தில்.
ஆனந்தம்
என்று ஆற்றுப்படுத்திய,
ஏசு பிறந்தநாளன்று,
ஏற்றமுடன் வாழ,
பிரார்த்தித்து,
வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ்.,
வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்.
பாவத்தின் சம்பளம்
துயரம்.மரணம்.
இறைவன் நாமம்
ஜெபித்து,
பலனை ருசித்து
பாருங்கள்.
மது போதை விட்டு
மத போதை
மாதா
 கருணை
பருகி
பலம் பெருக்குங்கள்.

கருத்துகள் இல்லை: