வெள்ளி, நவம்பர் 18, 2011

advise for +2

+௨ (2) மாணவர்களுக்கு   அறிவுரைகள்
அன்பும் ஆற்றலும் உள்ள மாணவச் செல்வங்களே,
பாரதப் பெருநாட்டை பார் புகழைச் செய்ய,
தோன்றிய நாட்டின் எதிர்கால,சந்திர சூர்யர்களே,விண்மீன்களே,
அன்பும் பண்பும் அறிவும் ஆற்றளுமுள்ள,ஆளுமைத்திறன் உள்ளோரே,
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள்,
உங்கள் எதிர்கால உயர்விற்கான அடிக்கற்கள்!
உயர்ந்த கோபுரம் போன்ற
உங்கள் வாழ்க்கைக்கு -அதுவே
கைகொடுக்கும்  கைகாட்டி.
உங்களை ஏற்றம் பெறச்
 செய்யும் ஏணிப்படிகள்.
தேர்விற்காக  ஐயம் நீங்கிடப் படியுங்கள்.
ஒரு முகமான மனதுடன் ஓய்வின்றி படியுங்கள்.
படிப்பு பாரினில் உங்களுக்கு,
நல்லதோர் பிடிப்பை ஏற்படுத்தும்.
பிற்கால வாழ்க்கையைப் பிரகாஷமாக்கும்.
பீடு நடை போடச்செய்யும்.
பெரும் செல்வங்களை, அருட் செல்வங்களை
அரிய மன விருப்பங்களை
 ஈடேற்றி வைக்கும்.
பேறுகள் பதினாறையும் ஈன்ற வைக்கும்.
போற்றுவர் சுற்றத்தார்,
பெருமை படும் கல்வியகம்.
இன்னும் மூன்று திங்கள்களே,
இனிய ஈடற்ற    உயர்கல்வி  உங்களை
  கூவி   அழைக்க,
உங்கள் "பிற ,வீண்  சிந்தனைகள்,
அரட்டைகள்,தொலைகாட்சி
தொல்லைகள்,"  அகற்றி,
உள்ளத்தில் ஊக்கமும்
ஆர்வமும் கொண்டு,மனதை
ஒருமுகப்படுத்தி,
தேர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,
கருமமே கண்ணாயிரமாக
கருத்தாழத்துடன்  படியுங்கள்
கடவுளின் அருட்பார்வை
ஆசிகளாக அமையட்டும்.
அகவை மிக்க என் வாழ்த்துக்கள்,



 ,


கருத்துகள் இல்லை: