புதன், பிப்ரவரி 22, 2017

ஆண்டவனிடம் வேண்டுகோள்

அதிகாலை வணக்கம் . 
ஆண்டவனிடம் வேண்டுகோள்.
குற்றவாளிகளைத் தலைவனாக்கி 
வணங்க விரும்பவில்லை நான். 
எனக்காக ,என் குடும்பத்திற்காக 
என்னைப்படைத்த பெற்றோர்களுக்காக,
உற்றார் உறவினர்களுக்காக
என்னுடைய சுற்றத்திற்காக ,
என் தேசத்திற்காக .
நல்லவர்களுக்காக .
நா நய முள்ளவர்களுக்கா
பிரார்த்தனை அவசியமா ??
அனைத்தும் அறிந்த உனக்கு
எங்கள் பிரார்த்தனை எங்கள் ஆத்மா திருப்த்திக்கு. 





உன்னுடைய நம்பிக்கையால் வாழ்கிறோம் என்பதே சரி .
உன்னருள் அனைவருக்கும் சமம் என்றால்
உன்னிடமே சரணாகதி. நீ விட்டவழி .
அதுவே எங்களுக்கு ஊக்கம்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

கருத்துகள் இல்லை: