ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

எனது குரல் /குறள்



௧. தொலைக்கா நட்பே நட்பென்க-

நட்பல்ல

 தொல்லைக்காக வரும் நட்புணர்க.

௨  .சொல் என்பது சொல்லும் விதத்தில் சொல்க, அதுவல்லது

       வகை யற்ற சொல் பகை வளர்ப்பதாகிவிடும்.

௩. சொல்லல   மனப் பிணி  தரும் சொல், நாட 
    
     வலம்  வரும்  சொல்லே வளம்.
௪.எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம்,

   வன்சொல்லால் வளருமே பகை.

5.  சொல்லுக   செயலாக்கச்  சொற்களை --நிற்க 
     செயற்றத்திற்கே. 

௬.அன்பற்ற  சுடுசொல்   நிலைப்பகையே ,அது 
     பண்பற்ற   செயலே  தரும் .

௭. அவையறிந்து  சொல்க சொற்களை ,  இல்லையென்றால் 
     தன் மானம்   தானே  கெடும். 

௮. சொல்லில்  உயர்சொல்   சொல்லுக , அதுவன்றி 
        தாழ்  சொல்  தாழ்வே  தரும். 

௯.  வாழ்த்தும்  சொற்களே  வாழ்வுதரும் , பிறரைத் 
       
       தாழ்த்தும்  சொற்கள்  தாழ்வு  தரும்   காண்.

௧௦.    போற்றும்  சொற்களே  புகழ்  தரும் , தூற்றும் 

         சொற்கள்  உன்னை  தூளாக்கும் .

      
    















எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம், வன்சொல்லால் வளருமே பகை.

கருத்துகள் இல்லை: