செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அரசியல் ,ஆன்மிகம்  இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள்.

ஒன்று நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெவது.மற்றொன்று அன்பு,பண்பு ஒழுக்கம்,பண்பாடு,கலை ,உண்மை ,நேர்மை ,ஈகை,பரோபகாரம்  போன்ற மனிதத்தன்மை வளைப்பது.

    அரசியல் நம் நாட்டில் சுதந்திரத்திற்குப்பின்,௧௯ஆம் நூற்றாண்டிற்குபின் 

 என்ற நிலையில்  சுதந்திரப்போராட்ட கால தியாகம்,தேசபக்தி ,சுயநலமின்மை 

போன்றவை  மாறிவிட்ட மனநிலையை இன்று காண்கிறோம்.காரணம்,

நாடு அடிமைப்பட்டிருந்தகாலத்தில் இருந்த துன்பங்களை மறந்துவிட்டோம்.

       நன்றாக  சிந்தித்தால் அறிவு வளர்ச்சி என்பது  பொருளாதாரம் மட்டுமே 

என்ற நிலைக்கு வந்துள்ளோம்.காரணம்  அரசியல் கல்வியை வியாபாரமாக்க 

வழிவகுத்துவிட்டது.ஆன்மீகமும் வணிகமயமாகிவிட்டது.


அரசியல் வணிகமயமாகிவிட்டது. ஒரு கட்சி வளரவேண்டுமென்றால் உண்மையான தேசப்பற்று,தொண்டு மனப்பான்மை ,சுயநலம் இல்லாதவர்களால் வளரவேண்டும்.இன்று சிறு=சிறு கருத்துவேறுபாடுகளால்

கட்சிகள் உடைகின்றன. ஊழலைக்காட்டி கட்சியை உடைத்து வெளிவருபவர்கள்  ஒரு ஊழல் கட்சியுடனே கூட்டணி சேருகின்றன. தி.மு.க.
அ.தி.மு.க,கம்யுனிஸ்ட்.,பா ம.க  ,ம.தி,மு,க ;தே.தி.மு.க ,பார்வர்ட் பிளாக் ,சரத் கட்சி,திருமா.கட்சி,அனைத்தும் முதல் இருகட்சிகளானா திரு.மு.க. அல்லது செல்வி ஜெயலிதா இன்றி இயங்கமுடியாது என்ற நிலையிலேயே 

கட்சிகள் நடத்துகின்றனர்.

தேசீயக் கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை தன காலில் நிற்க முயற்சிக்கவே இல்லை.காரணம் திராவிட இயக்கம் வளர்ந்ததது  இளைஞர்களால். 
அந்த இளைஞர்களை தமிழக காங்க்ரஸ்  ஒரு சக்தியாகப் பயன் படுத்தவில்லை.

பெருந்தலைவர் காமராஜரை இளம் வயதுள்ள ஸ்ரீநிவாசன் தோற்கடித்தார்.
குடந்தை ராமலிங்கம் தேசியக்கட்சி. அனால் இந்த இளைஞர்கள் எங்கே என்ற நிலை விரைவில்.

இளைஞர்களை பின்னர் அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இது அரசியல் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாமல் இருக்க இந்திராகாந்தி 

அவர்களும் தமிழகத்தில் தேசியக்கட்சி காங்கிரஸ் ஆட்சியில் அமர முயலவில்லை. தமிழக காங்கிரசில் இன்றும் ஒற்றுமை ஏற்படவில்லை.
ப.சிதம்பரம் தனியாக நின்றால் நிச்சயம் வெல்லமுடியாது, அனால் அவர் மத்தியில் தொடர்ந்து அமைச்சர்.

தொடரும் ......

கருத்துகள் இல்லை: