சனி, மார்ச் 30, 2013

மனிதர்கள் வாழ்க்கையில்  பல போராட்டங்களை செய்யவேண்டி உள்ளது.
ஒருவனுக்கு அறிவு பற்றாக்குறை என்றால் ஒருவனுக்கு ஆனந்தம்.
ஒருவனுக்கு  ஆயுள் குறை;ஒருவனுக்கு ஆரோக்கியம்.
ஒருவனுக்கு ஆஸ்தி  இல்லை;ஒருவனுக்கு ஆதரவு இல்லை;
ஒருவனுக்கு நாதி இல்லை .
ஒருவனுக்கு வேலை இல்லை. ஒருவனுக்கு வேலை பளுவால் ஓயவில்லை.
உழைப்பவனுக்கு சோறில்லை;அவனை சார்ந்தோருக்கு ஓய்வும் உண்டு ;சோறும் உண்டு;
பணம் படைத்தோருக்கு  சந்தானம் இல்லை; சந்தானம் உள்ளோருக்கு லக்ஷ்மி கடாட்சம் இல்லை.

நேர்மையில்லை;அதிகாரம் உண்டு; நேர்மை உண்டு அதிகாரம் இல்லை.
இதுதான் வாழ்க்கை;


கருத்துகள் இல்லை: