புதன், செப்டம்பர் 04, 2013

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இன்று ஆசிரியர்கள் தினம்.

குரு  என்றால் பெரிய என்று பொருள். இறைவனுக்கு இணையானவர்.

குரு அருள் இருந்தால் தான்  இறைஅருள் கிட்டும்.

குருவே துணை என்று வாழ்ந்தவர்கள் அதிகம்.

குரு என்பவர் ஆசிரியராக மாறியது ஆங்கிலேயர்கள் வந்தபிறகு.

கற்பிப்பவர் ஆசிரியர். குற்றம் குறைகளைப்போக்கி  மாணவர்களை வாழ்விற்கு ,சமுதாயத்திற்கு ,நாட்டிற்கு  பயன் உள்ளவர்களாக உருவாக்குபவர் ஆசிரியர்.

இன்று ஆசிரியர் எப்படி உள்ளார்?

மாணவர்களிடம்  பேட்டி  எடுத்தால் ......

நல்லாசிரியர்களும் உள்ளனர்  என்ற பதில் வரும்.இந்த பதிலில் நல்ல என்பதற்கு எதிர்ச்சொல் ஆசிரியர்களும் உள்ளனர்.

ஆசிரியர்கள் எப்பொழுதுமே ஒழுக்கம் குறையாமல் இருக்கவேண்டும்.

மாணவர்களை ஒழுக்கம் நிறைந்தவர்களாக ஆக்குதல் வேண்டும்.

சமுதாயமும் நாடும் முன்னேற முக்கியமானவர்கள் ஆசிரியர்கள்.

முன்னாள் ஜனாதிபதி  தத்துவமேதை dr .ராதாக்ருஷ்ணன்  அவர்கள் பிறந்தநாள்.

இந்த நன்னாளில் அனைத்து ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஹிந்தி கவிஞர் கபீர் படிக்காதவர்.அவர் குரு ராமானந்தரை  மானசீக குருவாக ஏற்றவர்.

அவர் எழுதிய ஈரடி :
குருவும் இறைவனும் முன்னால் தோன்ற,யாரை வணங்குவது என்ற வினாவிற்கு விடை,
நான் குருவை வணங்குவேன் ,அவர்தானே இறைவனைக்  காண வழிகாட்டியவர் .

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை: