ஞாயிறு, மே 12, 2013

ஆண்டவன் ஒரு குற்றவாளி.

சென்னை  நகரில்  தண்ணீர் மாநகராட்சி  லாரிகளில் விநியோகம்,

தண்ணீருக்காக பதிவு செய்து ஒரு வாரமாகியும் தண்ணீர் இல்லை;

நாவறட்சி  விநியோகம் செய்வோருக்கு மனசாட்சி இல்லை.

மனிதாபிமானம்  வற்றிவிட்டது;

தொலை பேசியில் ஒருவர் மூன்று நாள் என்கிறார் ,
மூன்று நாளைக்குப்பின்  கேட்டால் ஒருவர் நாளை என்கிறார்
ஒரு பெண் குரல் வராது என்கிறது.

இப்படியே ஒருவாரமாகியும் தண்ணீர் வரவில்லை;

இரக்கமற்ற இதயங்களைப் படைத்த இறைவன் ஒரு குற்றவாளி;

எங்களைப்போல் நேர்மை பேசி கஷ்டப்படும் எங்களைப் படைத்த

ஆண்டவன் ஒரு  குற்றவாளி.

எங்கள் குறைகளை ஆண்டவனும் கேட்கவில்லை;

ஆள்வோரும் கேட்கவில்லை;

தண்ணீருக்காக  கண்ணீர் சிந்தும் எங்கள் அடுக்குமாடி குடி இருப்போர்
படும்  வேதனை  ஆண்டவன் இருந்தால் கேட்கட்டும்.
இல்லை எனில் நாங்கள் தண்ணீர்வரி கட்டியும்
எங்கள் அடுக்கத் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பாரில்லை.
நன்றி மாநகர பொறியாளர் மற்றும் உறுப்பினருக்கு.

கருத்துகள் இல்லை: