ஞாயிறு, நவம்பர் 11, 2012

அலைமகள் அருட்பர்வைபெற்று ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள்.

தீபாவளி    திருநாள்.
தீயவர்கள்   அழிக்கப்பட்ட  நாள்.
மகிழ்வான  நாள்.
விளக்கேற்றி  இருளை ஒளிர 
வைக்கும்  நாள்.
அக இருள் என்று ஒன்று உண்டு.
புறப்பொருள் ஆசைகொண்டு,
அஹங்காரம்,
பொன்னாசை,
பெண்ணாசை ,
பேராசை,
பொருளாசை என 
ஆசைகளுக்கு அளவில்லை.
இந்த  ஆசை  அகத்தில் 
இருந்தால் அது அக இருட்டு.
புறத்தில் வெளிப்பட்டால்,
அவமரியாதை.
இந்த தீய இருளகற்றி 
அக  இருள் போக்கி ,
புற இருள்போக்கி 
வாழ்க்கை ஒளிமயமாக 
இந்த தீபாவளி.

இந்த  நன்னாளில் ,
,மகிழ்ச்சி  அலை 
கடல் அலை,
போல் வீச
வளம்பெருக .
ஆரோக்கியம்,
தீர்க்க ஆயுள் 
பெற  .
அலைமகள் 
அருட்பர்வைபெற்று
ஆனந்தமாக  வாழ 
வாழ்த்துக்கள்.

1 கருத்து:

Ranjani Narayanan சொன்னது…

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!