என்னத்தே எழுதுவது,-நான் 
என் எண்ணங்களை எழுதுகிறேன். 
  செய்த   புண்ணியங்களையா-அல்லது  
சேர்த்த பாவங்களையா ? 
சொன்ன பொய்களையா , 
சொல்லமுடியாத  உண்மைகளையா? 
என்னத்தே எழுதுவது-என்  
எண்ணங்கள் எழுதுகிறேன். 
கொட்ட முடியாததை  
கொட்ட நினைத்தாலும், 
சமுதாய  அச்சத்தால்-சற்றே  
அடங்கியே எழுதுகிறேன். 
அடங்கியே அடக்கியே வாசித்தாலும், 
அட்டகாச  சிரிப்புக்கு  
அமைதியாக எழுதம் எண்ணம், 
அலைஅலையாய் வந்தாலும், 
ஆசிரியர் ,ஆ சிறியரா? 
என்ற எண்ணம்  எழா  வண்ணம்,- 
 
 எழுதுகிறேன்.
 நெடுமால் திருமுருகா  ,
நித்தம்-நித்தம்,
இந்த  இழவா ? 
ஏடு தொலையாதோ , 
எழுத்தாணி முறியாதோ, 
வாத்தியார் சாவாரோ  
வயித்தெரிச்சல் தீராதோ/ 
என்றே எண்ணம் கொண்ட  
மாணவர் சமுதாயம்  இருந்த  
பள்ளியில் ,பணியேற்ற நாள் முதல், 
ஆசிரியர்கள் விலைபோகும்  
பள்ளியில் பணியாற்றும் சூழலில், 
கற்க ஆர்வமுள்ளோர் அரசு பள்ளிகளை  
விட்டு தனியார் பள்ளி செல்லும்போது, 
படும் எரிச்சல் எப்படி எழுதுவதோ/ 
என்னத்தே எழுதுவது, 
எண்ணங்கள் எழுதுகிறேன். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 | 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக