புதன், அக்டோபர் 24, 2012

மீண்டும் மக்கள் சிந்தனைக்கு


மீண்டும் மக்கள் சிந்தனைக்கு 


தமிழ்நாடு  மழை  பெய்கிறது.

ஏரிகள் விலை நிலமாகின்றன.

இலவசங்கள்  அதனால் என்ன பயன்.
மடிகணினி மடியில்.
மின்சாரம் இல்லை.
இன்டர்நெட் வசதி இல்லை.
அதற்குமாதம் பணம்கட்ட
 வழியுமில்லை.
பாதுகாப்பான மிதிவண்டி பயனத்திர்கேற்ற 
சாலை வசதிகள் இல்லை.

தலைவருக்கு சமாதி அவசியம் தான்.
ஒவ்வொருமுறையும் அதன் வடிவழகு
 மாற்ற கோடிக்கணக்கில் 
சிலவு செய்து மக்களுக்கு 
அடிப்படை வசதிகள் செய்யாமலிருப்பது 
அத்தலைவரின் ஆத்மா துன்புறும்  செயல்.

ஒரு தலைவர் வைத்த வளைவோ என்ற ஐயத்தால் இடிப்பு.
நம் தலைவர்   வைத்தது என அமைப்பு.
கோடிக்கணக்கில் பணம் சிலவு.
யார்  பணம்!!!
இது நமது வரிப்பணம்.
சட்டசபை மாற்றம்.
  கோடிக்கணக்கில்  பணம் விரயம்.
மீண்டும்  பொன் விழா வளைவு .
கோடிக்கணக்கில் சிலவு.
யார் பணம்!!
மடிப்பாக்கம் ,ஆவடி;அம்பத்தூர்,பள்ளிக்கரணை 
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் படும் அவஸ்தை;
இது மீண்டும் ஊழலுக்காக.
செய்த சிலவே செய்து 
மக்களை   ஏமாற்ற.
 மக்களி ன் அமைதி;
இவர்களுக்கு  வசதி.
நடுத்தர வருமானம் 
போராட வசதியுமில்லை;
வருமானமும் இல்லை.
ஆளுவோருக்கும் அதிகாரிகளுக்கும்,
வட்டங்களுக்கும் மன சாட்சியும் இல்லை.
ஆண்டவனுக்கும் இரக்கமில்லை.
ஆள்வோருக்கும் இரக்கம்ல்லை.
பிரம்ம சக்தி ஆலயம் அமைந்த சாலை;
போக்குவரத்து மிகுந்த  சாலை;
குண்டும் குழியுமாய்  அல்லல் படும்மக்கள்.
பல ஆண்டுகளாய் மக்கள் படும்    துன்பங்கள் தெரிந்தும் 
நிலையான நிவாரணம் செய்ய அரசு.
மனசாட்சி இல்லோரே!
நீங்கள் செய்யும் பாவம்
புண்ணியம்
என்னைப்போன்ற ஆத்மாக்கள் ஏசும் ;போற்றும்.
மரணம் திண்ணம்.





கருத்துகள் இல்லை: