செவ்வாய், அக்டோபர் 02, 2012

அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு அழுது கொண்டுதான் இருக்கும்


தேசத்தந்தை 
உலகின் அனைத்து நாடுகளும் 
போற்றி  வணங்கும் 
உத்தமத் தலைவர்.
சுதந்திரப் போராட்டத்தில் 
அனைத்து மதங்களையும் 
இணைத்து 
மனித சமுதாயத்திற்கு விடுதலை 
என்பதை உணர்த்தியவர்.
ஈஸ்வர் அல்ல தேரே நாம் 
சப்கோ சன்மதி தே பகவான் என்று 
பஜனைப்  பாடல் பாடியவர்.
ஹிந்து ,முஸ்லிம் ,सीख சீக்  ஈசாயீ 
ஆபஸ் மென் ஹைன் பாயி  பாஈ  என்று 
இசைத்தவர்.

காந்தி என்றால் வைஷ்யர் ;பனியா ;செட்டியார்;
இந்த சாதிப்பெயர் பொதுப்பெயராக மாறி 
ஜாதி வேறு பாட்டை ஒழித்தவர் .
இத்தலி மருமகளும் சோனியா காந்தி.(செட்டியார்)
சென்னையில் ஹிந்தி பிரசார் சபையின் 
மையம் அமைத்து 
தமிழகத்து மக்கள் 
ஆளும் அரசு எதிர்த்தாலும் 
இந்தியத் தொடர்புக்கு 
ஹிந்தி மொழி கற்க 
1918இல் அடிக்கல் நாட்டியவர்.
ஹிந்தி தெரியவில்லை என்ற ஆதங்கம் 
இன்று தமிழகம் முழுவதும் மக்கள் 
ஆழ்  மனதில் உதிக்க கார ணமானவர் .
தொழில் கல்வி அவசியம் என்றவர்.
தாய் மொழி கல்வியே தரம் .
சிந்தனை வளர்ப்பது என்றவர்.
உண்மை.நேர்மை,அஹிம்சை ,எளிமை என்று வாழ்ந்தவர்.
ஆனால் 
இன்று ஆண்டவன் பெயரைச் சொல்லி யும் 
உத்தமர் காந்திபெயரை சொல்லியும் 
கருப் பு ப் பணம் வெளிநாட்டில் சேகரித்து,
கோடிக்கணக்கில் கேடிகளை வைத்து 
அரசியல் நடத்தும்  அநியாயத் தலைவர்கள்.
உத்தமர் சமாதியில் வணங்கி 
உத்தமக்கொள்கைகளையும் சமாதி வைக்கின்றனர்.
அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு 
அழுது  கொண்டுதான் இருக்கும்.
இன்று முதல் 
அவரது கொள்கைகளை 
உண்மையாக நடத்த உறுதியுடன் 
இருப்பது தான் அவரது ஆத்மசாந்தி யடைய 
நமது  சிர ந்தாஞ்சலி.

வாழ்க  காந்தீஜி.

கருத்துகள் இல்லை: