புதன், அக்டோபர் 17, 2012

அமைதி நகரம் அமைதி அற்ற நகரமாக மாறியது.

புதிய  குற்றச்சாட்டு.

கேஜ்ரிவால்   பாரதீய ஜனதா  மீது குற்றம் சாட்டியுள்ளார். கடகரி  விவசாயிகளின் நிலத்தை  அபகரித்துள்ளார்.

நம் நாட்டு விவசாயிகளின்  முன்னேற்றம்  பற்றிய அக்கறை ஆளும் கட்சிகளுக்கோ  எதிர் கட்சிகளுக்கோ  இருந்திருந்தால்
விளை நிலங்கள்  விலை போகும்  வீட்டுமனைகளாக  ,
தொழி ற் சாலைகளாக   மாறி இருக்காது.

ஹிந்தியில்  ஒரு கதை.

அமைதி நகரம் என்று ஒரு நகரம்.
மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருந்தனர்.
அங்கு அன்புதான் குடியிருந்தது.
மக்கள் ஒருவருக்கொருவர்  உதவி செய்து வந்தனர்.
விவசாயம் முக்கிய தொழில்.
சண்டை சச்சரவே கிடையாது.
உழைப்பவர்களுக்கு மட்டுமே உணவு.
அந்நகரில்  அனைவரும் உழைப்பாளிகள்.
காவல் நிலையம்,நீதிமன்றம்கிடையாது.
நால்வர் மட்டும் வேலையில்லாமல் இருந்தனர்.
அவர்கள் சோம்பேறிகள்.
வேலை செய்வது அவர்குக்குப் பிடிக்காது.

சைத்தானின் பார்வை அந்நகரின் மீது  விழுந்தது.

அந்த   நகருக்கு ஒரு  வியாபாரியை அனுப்பியது.
வியாபாரி நகரத்தை வலம்  வந்தார்.
அமைதி  நகரம்.உழைக்கும் வர்க்கம்.
சைத்தானின்  ஆலோசனை பேரில் சோம்பேறிகளை
முதலாளி ஆக்கினான்.
அவன் கொடுக்கும் கூலிக்கு ஆசைப்பட்டு
தங்கள்  வேலை களை விட்டு விட்டு ம க்கள்
தொழிலாளிகளாக   மாறினார்கள்.
முதலில்  மாவாட்டும்   இயந்திரம்.
வீட்டில்  மாவாட்டி வேலை செய்தவர்கள் பலர்
வேலையிழந்தனர்.
இவ்வாறு மற்ற மூவரும்  
தொழில் ஆரம்பித்து பணக்கார்களானார்கள்.
நகரத்தில் பெரும் கட்டடங்கள் எழும்பின.
தொழிற்சாலைகள் பெருகியது.
வறுமையில் மக்கள் இருந்தனர்.
வேலை இல்லாமல் இருந்தனர்.
பட்டினியில் வாடினர்.
திருட்டு, கொள்ளை,அதிகரித்தது.
சொம்பேரியில் ஒருவன் நீதி பதியாகி
பணக்காரனானான்.
ஒருவன் காவலர்களை நியமித் து
மக்களிடம் வசூலித்து குறைந்த கூலிகொடுத்து
பணக்காரனானான்.
மக்கள் வறுமையில் வாடினாலும் ,
தன்  நகரத்தின் புதிய பணம் படைத்தோரின்
கட்டடங்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இப்பொழுது ஒரு சோம்பேறி
கூலி ஆட்களை  நியமித்து வெளி ஊரிலிருந்து
தானியங்கள்   வாங்கி   அதிக விலைக்கு
 விற்று பணக்காரன் ஆனான்.
அந்த நகரத்தில்  நீதிமன்றம்,காவல் நிலையம்,நிறுவப்பட்டது.

அமைதி  நகரம் அமைதி அற்ற  நகரமாக மாறியது.
முதலில்  உழைத்தவர்களுக்கு  உணவு கிடைத்தது.
இன்று சோம்பேறிகள் சாப்பிடுகின்றனர்.

விவாசாயம் முற்றிலும் நடக்கவில்லை.
 இதே நிலைதான் இன்று.

விளைநிலம் வீடுகள்,பொறியியல் கால்லூரிகளாக மாறிவிட்டது.
விவசாயிகள்  நகரை நோக்கி வந்துவிட்டனர்.
எதிர்காலம் உணவுக்காக  வெளிநாட்டை எதிர்பார்க்கும்காலம் வரும்.
அதற்கான இறக்குமதியிலும் ஊழல் நடக்கும்.

இதற்கு கிராமம் தன்னிறைவு திட்டம்  மட்டும் தான்.

ஆனால் கட்காரி   போன்றவர்களால்  அது சாத்தியமற்றுப்போகும்






கருத்துகள் இல்லை: