- 66வது சுதந்திர தினம்
 - நாடு விடுதலை அடைந்து
 - 66 ஆண்டுகள் கடந்து விட்டன.
 - நாட்டில் வளர்ச்சிகள் ,
 - பலமறுமலர்ச்சிகள் .
 - உள்ளத்தில் கிளர்ச்சிகள் .
 - தொழில் நுட்ப வளர்ச்சிகள் .
 - தேசீய நெடுஞ்சாலைகள் ,
 - போக்குவரத்துத் துறை ,
 - அனைத்துத் துறையிலும்
 - முன்னேற்றம் தான் .
 - சோம்பேறிகள் தவிர,
 - அனைவருக்கும் வேலைவாய்ப்பு .
 - நகரங்களில்
 - வேலைசெய்யஆளில்லை .
 - சிற்றூர்களில் விவசாய நிலங்கள்
 - கட்டடங்களாக முன்னேற்றம்.
 - பொறியியல் கல்லூரிகள் ஈசல்
 - புற்றுபோல்.
 - கோடிக்கணக்கில் கல்வியில் .
 - விடுதலை அடைந்த முன்னேற்றம்
 - மகிழ்ச்சி அளித்தாலும்
 - சுதந்திரத்திற்காக போராடிய,
 - தியாகிகள் ஆத்மா அமைதி யாக
 - மகிழ்ந்தாலும்
 - முன்னேற்றத் தடைக்கற்கள்
 - அவர்களை veவேதனை
 - அடயச்செய்யும்.
 
- சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம்.
 - ஆன்மீக வழிகாட்டிகள் ஆஸ்ரமங்களில் கருப்புப்பணம்.
 - கல்வி என்ற பெயரால் பகற்கொள்ளை .
 - மடாலயங்களில் ஆலயங்களில் மன்மத லீலைகள்.
 - வருமானத்திற்காக மது ,மாது சாலைகள்.
 - அரசாங்க அலுவலகம் என்றாலே கை ஊட்டு ஊழல்கள் .
 - ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள் செய்யும் ஊழல்கள்.
 - சிசுக்கள்,கள்ளக்காதல்,விளைவு படுகொலைகள் ,விவாகரத்து வழக்குகள் அமைதியற்ற இல்லறம்
 - தாய் மொழி வெறுப்பு ஆங்கில விருப்பு .
 - தாய் மொழி படிப்பு விளைவு வறுமையால் துடிப்பு.
 - பெருகிவரும் முதியோர் இல்லங்கள் .
 - மேலை நாட்டு கலாச்சாரங்கள் .
 - அரவணைப்பு ஆதரவற்ற குழந்தைகள் .
 - குழந்தைகளை தவிக்கவிட்டு ,புது
 - கணவனைத்தேடும் பெண்கள் .
 - கள்ளக்காதலுக்காக கட்டியகணவனை கட்டிய மனைவியை பெற்ற குழந்தையை கருணையின்றி கொலை செய்யும் நவீன திருமண உறவுகள் .
 
விடுதலை தியாகிகள் ஆத்மா சாந்திஅடையுமா ?!!
இவை முன்னேற  தடைக்கற்களே .
பண்பாட்டின் ,தாய்மொழியின் 
வீழ்ச்சி
 ஒற்றுமைக்கு மன அமைதிக்கு 
வளர்ச்சிக்கு வேகத்தடைகளே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக