புதன், ஏப்ரல் 18, 2012

GANAPATHY ARUL.

அவனியில் ஆறுமுகம் அண்ணன்,
அவனே கணங்களின் அதிபதி.
அவன் அங்கிங்கெனாத படி,
அருளும் அருளாளன்.
அரசமரத்தடியிலும்,
ஆற்றங்கரையிலும்,
பிள்ளைகள் விரும்பும்,
பிடித்து வைத்த பிள்ளையார்.
பிணிகள் நீக்கும் .
பிணிதீர்க்கும் பிள்ளையார்.
சங்கடங்கள் தீர்க்கும்,
சங்கட ஹர விநாயகர்.
தடைகள் தீர்க்கும்,
தடை நீக்கும் பிள்ளையார்.
சக்தி அளிக்கும் சக்தி விநாயகர்.
நாடி வருவோருக்கு,வேண்டும்
வரம் தரும்,வரசக்தி விநாயகர்.
சகலமும் தரும் ,சர்வ சித்தி விநாயகர்.
வல்வினைகள் அகற்றும் ,
வினைதீர்க்கும் விநாயகர்,
வல்லமை தரும்,
வல்லப விநாயகர்.
வல்லமை தரும்,
வல்லப கணபதி.
ஆனந்தமளிக்கும்,
ஆனந்த நர்த்தன விநாயகர்.
கனவுகளை  நினைவுகளாக்கும்,
கற்பக விநாயகர்.
ஞாலத்தில் பிறந்தோருக்கு,
ஞானம் தரும்,ஞான விநாயகர்.
செல்வம் தரும் செல்வ விநாயகர்.
ஆரோக்கியம் தரும் ,ஆரோக்ய விநாயகர்,
ஆயுள் தரும் ,ஆயுர் சக்தி விநாயகர்.




கருத்துகள் இல்லை: