திங்கள், மார்ச் 12, 2012

tharamaana ilakkiyangal

இறைவன்  அருள்

நான் இறையருள் பெற்ற புலவர்கள் வரலாறு படித்தேன்.அனைவரும் ஆண்டிகளாக கோயில்களில் பாட்டுப்படி பல அதிசயங்கள் நிகழ்த்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் பொருளுக்கு ஆசைபட்டது இல்லை.ஆனால் பொருள் பொதிந்த பாடல்கள் இயற்றி உள்ளனர். காசுக்காக கண்டபடி கட்டிப்பிடி பாடல்கள் பாடவில்லை.பல யுகங்களுக்கு மனிதன் அமைதியான மன நிறைவான மகிழ்ச்சியான நீண்ட ஆரோக்யமான வாழ்க்கைத் தத்துவப்பாடல்கள் பாடினர்.
எக்காலத்திற்கும் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் பாடினர்.
ஆனால் காலப்போக்கில் அவை பொக்கிஷங்களாக நூலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விட்டன..அவை எல்லாம்  விலை மதிப்பற்ற காவியங்கள் என பாராட்டப் பட்டதால் ஒரு சிலரால் பட்டிமன்றங்களிலும் .மேடைகளிலும் மேற்கோளுக்காக  எடுத்துக்காட்டப்பட்டு சிந்தனைகளைத் தூண்டின.


காலப்போக்கில்  பட்டிமன்றங்களும் திரைப்படப்பாடல்கள் கலாசார மேம்பாடா/
சீரழிவா என்று மாறிவிட்டன.
நல்வழி மறந்து சில நேர இன்பங்களுக்கான பாடல்கள் இன்றைய சமுதாயத்தில் குழந்தைகளைப் பாட வைத்து ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை //சைவக்காதல்/அசைவக்காதல்
ஆன்மீகக் காதல்/ இலக்கியக்காதல்.
இதில் அழிந்துபோவது ஆண்கள்.சவரக்கத்தி முதல் அனைத்திலும் கவர்ச்சி.
இளம் தலை முறையினர்  அழிந்து பெற்ற குழந்தையை தவிக்க விட்டு மாற்றானை விரும்பும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்.பல குடும்பங்களில்
நிம்மதியில்லை.






கருத்துகள் இல்லை: