26   தெய்வாம்சம்  ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது 
- அபயம்=எவ்வித அச்சமின்றி இருத்தல்.
 - சத்த்வசம்சுத்தி =மனத்தூய்மை
 - ஞானயோகவ்யவச்திதி:=த்யான யோகத்தில் தொடர்ந்து தத்துவ ஞானம் பெரும் முயற்சியில் நிலையாக இருத்தல்.
 - தானம் ச =சாத்வீக தானம்.
 - தம:=புலனடக்கம்.
 - யஜ்ஞ:=== பூஜை,யாகம்,அக்னிஹோத்ரங்கள் நியமப்படி செய்தல்.
 - சுவாத்யாய:==வேத சாஸ்திர ஞானங்களை தானே படித்து மற்றவர்களுக்கும் கற்பித்தல்.
 - தப : ச = =சர்வ தர்மத்தை கடைபிடிப்பதில் அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு அறத்தில் திடமாக இருத்தல்.
 - ஆர்ஜவம் -==மன உடல் ரீதியான புலனடக்க நேர்மை
 - அஹிம்சை=ஒருவருக்கும் மனதாலும் சொல்லாலும் உடலாலும் எவ்வித தீங்கும் தராமை.
 - சத்யம்==உண்மையையே பேசுதல்
 - அக்ரோத:==யாரிடமும் தன் எதிரியிடமும் கோபப்படாமை
 - த்யாக:==ஆணவம் இன்றி இருத்தல்.
 - சாந்தி:=மன ஒருமைப்பாடு அமைதி,அலைபாயா மனம்
 - அபைசுனம் =மற்றவரை குற்றம் குறை கூறாமை
 - பூதேஷு தயா ==அனைத்து உயிரினங்களிடத்தும் இரக்கம் காட்டுதல்
 - அலோலுப்த்வம்==பற்றற்ற தன்மை .தன்னிடம் வரும் பொருளிலும் ஆசை இன்றி இருத்தல்
 - மார்தவம் ===மிருதுவாக இருத்தல்,மென்மை
 - ஹ்ரிஹி==உலகோடு ஒட்டி அறநெறியுடன் வாழ்தல் அதற்கு ஒவ்வாத செயல் புரிய நாணுதல்
 - அசாபலம் ==வீண் வெட்டி செயல்களை செய்யாதிருத்தல்
 - தேஜா :=ஒளியும் பொலிவும்
 - க்ஷமா =மன்னிப்பு
 - த்ருதி:=கொள்கை உறுதிப்பாடு
 - சௌசம்=புறத்தூய்மை
 - அத்ரோஹா=அனைவரிடமும் நட்புடன் இருத்தல்.பகைமை பாராட்டாமை
 - நாதிமாநித==தற்புகழ்ச்சி இன்மை
 
அத்தியாய ஆரம்பத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக