புதன், டிசம்பர் 14, 2011

26 divine character// sign 26 theivaamsangal lakshanangall

26   தெய்வாம்சம்  ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது
  1. அபயம்=எவ்வித அச்சமின்றி  இருத்தல்.
  2. சத்த்வசம்சுத்தி   =மனத்தூய்மை
  3. ஞானயோகவ்யவச்திதி:=த்யான யோகத்தில் தொடர்ந்து தத்துவ ஞானம் பெரும் முயற்சியில் நிலையாக இருத்தல்.
  4. தானம் ச =சாத்வீக தானம்.
  5. தம:=புலனடக்கம்.
  6. யஜ்ஞ:=== பூஜை,யாகம்,அக்னிஹோத்ரங்கள் நியமப்படி செய்தல்.
  7. சுவாத்யாய:==வேத சாஸ்திர ஞானங்களை தானே படித்து  மற்றவர்களுக்கும் கற்பித்தல்.
  8. தப :  ச = =சர்வ    தர்மத்தை  கடைபிடிப்பதில் அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு  அறத்தில் திடமாக இருத்தல்.
  9. ஆர்ஜவம் -==மன உடல் ரீதியான புலனடக்க நேர்மை
  10. அஹிம்சை=ஒருவருக்கும் மனதாலும் சொல்லாலும் உடலாலும் எவ்வித தீங்கும் தராமை.
  11. சத்யம்==உண்மையையே  பேசுதல்
  12. அக்ரோத:==யாரிடமும் தன் எதிரியிடமும் கோபப்படாமை
  13. த்யாக:==ஆணவம் இன்றி இருத்தல்.
  14. சாந்தி:=மன ஒருமைப்பாடு அமைதி,அலைபாயா மனம்
  15. அபைசுனம் =மற்றவரை  குற்றம் குறை கூறாமை
  16. பூதேஷு தயா ==அனைத்து உயிரினங்களிடத்தும்  இரக்கம் காட்டுதல்
  17. அலோலுப்த்வம்==பற்றற்ற தன்மை .தன்னிடம் வரும்  பொருளிலும் ஆசை இன்றி இருத்தல்
  18. மார்தவம் ===மிருதுவாக இருத்தல்,மென்மை
  19. ஹ்ரிஹி==உலகோடு ஒட்டி அறநெறியுடன் வாழ்தல் அதற்கு ஒவ்வாத செயல் புரிய நாணுதல்
  20. அசாபலம் ==வீண்  வெட்டி  செயல்களை செய்யாதிருத்தல்
  21. தேஜா :=ஒளியும் பொலிவும்
  22. க்ஷமா =மன்னிப்பு
  23. த்ருதி:=கொள்கை உறுதிப்பாடு
  24. சௌசம்=புறத்தூய்மை
  25. அத்ரோஹா=அனைவரிடமும் நட்புடன் இருத்தல்.பகைமை பாராட்டாமை
  26. நாதிமாநித==தற்புகழ்ச்சி இன்மை
மேற்கண்ட தெய்வ குண அடையாளங்களாக பகவத் கீதையின் பதினாறாவது
அத்தியாய ஆரம்பத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியுள்ளார்.

  1.    

கருத்துகள் இல்லை: