திங்கள், நவம்பர் 28, 2011

sanaathana dharmam

சனாதன தர்மம்

அனைத்து  வெல்ல முடியா இயற்கை  சக்திகளுக்கும்  இறைவடிவம் கொடுத்த சனாதன தர்மம்  இயற்கையாகவே மனிதனுக்கு  உடல் நலம் பேணும் மன அமைதி தரும் மன இயலையும் கற்பித்தது.ஆனால் நமது இயல்பான  அமைதி,பொறுமை,எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணங்கள்  நமது நாட்டின் இயற்கை வளம் அனைத்தும் அயல் நாட்டினரை கவர்ந்து காந்தம் போல் இழுத்தது.உலகிலேயே பல அமைதி ஒப்பந்தங்கள்,வணிகத்தொடர்புகள் ,ஆன்மீக சிந்தனைகள்,சகிப்புத்தன்மைகள் கொண்ட பாரதம் வேதகாலத்திலும் சரி,முகலாய ஆட்சியிலும் சரி,ஆங்கிலேய ஆட்சியிலும் சரி,இராமாயண மகா பாரதத்திலும் சரி  நாட்டின்  நலமே பெரிது என்று ஓரணியில் நம்மக்கள் இருந்தது இல்லை.இதுவே நம் நாட்டின் முன்னேற்றத்தில் தடைக்கற்களாக இருந்துள்ளது.

நமது நாட்டில் போர்கள் ராமாயணத்தில் சீதையின் காரணமாகவும்,மகா பாரதத்தில் பீஷ்மர் போரிட்டதும்,மூன்று அரசகுமாரிகளை கவர்ந்ததும் சுயநல  பங்காளிகள் போராட்டம் தான். அந்நூல்களில் உயர்ந்த கருத்துக்கள் இருக்கலாம். மாத்ரு பக்தி,பித்ரு பக்தி ,பிராத்ரு பக்தி,உயர்ந்த கீழ் ஜாதி சமத்துவம்,அரசனின் குணங்கள்,கடமை உணர்வு,அனைத்தும் அறிவுறுத்தப்பட்டாலும்  போர்கள் பாரதநாட்டின் நலம் கருதி நடக்கவில்லை.
உயர்ந்த எண்ணங்கள்,சித்தாந்தங்கள்,தெய்வீக அம்சங்கள் ஆனவத்திற்காகவும்,குறிகிய கோட்பாட்டிற்காகவும் என்ற முறையில் அமைக்கப்பட்டு எதிர் சிந்தனைகள் தூண்டுவதாகவே அமைந்தன.

ஒரே கடவுள்,அதை வழிநடத்த பல குருமார்கள்,பல மடாலயங்கள்,சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,சங்கரர் மார்க்கம்,ராமானுஜ மார்க்கம்,மத்வ மார்க்கம்,
க்ருஷ்ண மார்க்கம்,ராம மார்க்கம்,அவைகளின் மூலம் மனிதர்களிடம் வெறுப்புணர்ச்சி ,ஜாதி உணர்வுகள்.இவைகளுக்கும் மீறி நாட்டுப்பற்று.பாரதத்தின் பிரமிக்கத்தக்க  வளர்ச்சி கருத்து ஒற்றுமை.

இதற்கெல்லாம் மூலமாக நமது சனாதன தர்மம் ஆழமான  அருவ உருவ தெய்வாம்சங்களை  ஏற்றதுதான்.நமது மக்கள் அனைத்து மதங்களையும் சகோதர மாதங்களாக ஏற்றனர்.


.

sheer

கருத்துகள் இல்லை: